MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: மனித நேயம் தழைக்க பாடுபடுவோம் – எடப்பாடி பழனிசாமி பக்ரீத் வாழ்த்து
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மனித நேயம் தழைக்க பாடுபடுவோம் – எடப்பாடி பழனிசாமி பக்ரீத் வாழ்த்து

தமிழ்நாடு

மனித நேயம் தழைக்க பாடுபடுவோம் – எடப்பாடி பழனிசாமி பக்ரீத் வாழ்த்து

Admin
Last updated: மே 28, 2026 1:55 மணி
Admin
Share
SHARE

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியப் பெருமக்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இறை நம்பிக்கை கொண்டவர்கள் எந்த தியாகத்திற்கும் அஞ்சமாட்டார்கள் என்பதை உணர்த்தும் இந்த திருநாள், இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து தனது ஒரே மகனை தியாகம் செய்ய முன்வந்த இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் ஈடு இணையற்ற தியாகத்தை நினைவு கூரும் நாள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பக்ரீத் திருநாள், இறைவனின் விருப்பத்திற்கு இணங்க வாழ்வதே சிறந்த வாழ்க்கை நெறி என்பதை உலகிற்கு உணர்த்தும் பொன்னாள் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்கும் அதர்மம், அநீதி, சூழ்ச்சி, வன்மம் போன்றவற்றை வேரோடு அழித்து, நற்சிந்தனைகளும் நன்னெறிகளும் வெற்றிபெற தியாகங்களும் அர்ப்பணிப்புகளும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இறைத்தூதரின் தியாகங்களை மனதில் கொண்டு, மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபடுவோம் என இந்த பக்ரீத் திருநாளில் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த இனிய திருநாளில், உலகில் அன்பும் அமைதியும் தழைத்தோங்க வேண்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் வழியில், இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு தனது பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்குவதாக எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அனைவரும் மனிதநேயத்துடனும், சகோதரத்துவத்துடனும், தியாகச் சிந்தனையுடனும் வாழ வேண்டும் என அவர் மனதார வாழ்த்தியுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Bakridஅதிமுகஇஸ்லாமிய வாழ்த்துஎடப்பாடி பழனிசாமிபக்ரீத்மனித நேயம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 69% இடஒதுக்கீடு: சட்டப் போராட்டம் நடத்த தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்
Next Article ‘தத் த்வம் அஸி’ – ஆன்மிக கதையுடன் அதிரடி ஆக்ஷன்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பையில் கனமழையால் இடிந்து விழுந்த குடியிருப்பு கட்டிடம்

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழந்தனர்.…

ஜூலை 6, 2026

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி…

ஜூலை 6, 2026

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

போரூர் அருகே மரம் அறுக்கும் இயந்திரத்தால் வாலிபர் தற்கொலை

போரூர் அருகே வடமாநில இளைஞர் ஒருவர், மரம் அறுக்கும் இயந்திரத்தால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு…

1 Min Read
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு

திமுகவின் பேரிடர் காலம்: உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி

அண்ணா உருவாக்கிய கட்சியை ஒரு குடும்பம் கைப்பற்றியது பேரிடர் காலம் என உதயநிதி ஸ்டாலினுக்கு தமாகா ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது. திமுகவின் ஆட்சிக் காலமும் பேரிடர்க்…

2 Min Read
தமிழ்நாடு

காஞ்சிபுரம்: பட்டப்பகலில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை – பரபரப்பு!

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து 2 இளைஞர்களை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

ஆத்தூர்: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது

கெங்கவல்லி மண்மலை பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகன் அகிலன் (வயது 21). இவர் மருத்துவம் சார்ந்த படிப்பு முடித்துவிட்டு பெரம்பலூரில் உள்ள ஒரு மருந்து…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?