நாடகக் காதலால் தவிக்கும் பெற்றோர்களுக்கு வழிகாட்ட அமைப்பு தேவை: இயக்குநர் மோகன்

நாடகக் காதலால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு உதவ ஒரு அமைப்பு தேவை என இயக்குநர் மோகன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் 'நாடகக் காதல்' எனும் பெயரில் நடக்கும் திருமணங்களால் பாதிக்கப்படும் பெற்றோர்களுக்கு சட்டரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஆதரவளித்து உதவ ஒரு தனி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என பலரும் தன்னிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரபல திரைப்பட இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், திருப்பத்தூரில் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு ஒரு காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடி தஞ்சம் புகுந்தனர். அப்போது, அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் அவளிடம் கெஞ்சியும், காலில் விழுந்தும் கதறியும், அந்தப் பெண் தன் கணவருடன் செல்ல முடிவெடுத்தார். இதுகுறித்து காவல்துறையினர், அந்த ஜோடியை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.

இந்தச் செய்தியைச் சுட்டிக்காட்டிய இயக்குநர் மோகன், தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'தமிழகம் முழுவதும் நாடகக் காதலால் பாதிக்கப்படும் பெற்றோர்களுக்கு சட்டரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் உடன் நிற்பதற்கும், உதவுவதற்கும் ஒரு அமைப்பு தேவை என பலர் என்னுடன் தொலைபேசியில் கோரிக்கை வைக்கிறார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் தனது பதிவில், 'எதிர் தரப்பில் குறைந்தது 20 வழக்கறிஞர்கள், கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள் உடனடியாக ஒன்று கூடுகிறார்கள். அவர்களை எதிர்த்து இந்த அமைப்பு களத்தில் நிற்க வேண்டும்' என்றும் சிலர் வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கு என்ன வழி? இந்த பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு வழிகாட்ட வழக்கறிஞர்கள் தங்களுக்குள் ஒரு அமைப்பை உருவாக்க முடியாதா? அல்லது ஏதேனும் ஒரு அமைப்பு இதற்குத் தயாராக இருந்தால், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து உங்களை மக்களுக்கு அறிமுகம் செய்து கொள்ளுங்கள். பாவப்பட்ட இந்த பெற்றோர்களுக்கு வழிகாட்டுங்கள்…' என்றும் இயக்குநர் மோகன் தனது பதிவில் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடகக் காதல் திருமணங்களால் பெற்றோர்கள் படும் மன உளைச்சலையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் உணர்ந்து, அவர்களுக்கு உரிய சட்ட மற்றும் உளவியல் ஆலோசனைகளை வழங்க ஒரு பிரத்யேக அமைப்பு அவசியம் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

இந்தச் சூழலில், இயக்குநர் மோகனின் இந்தப் பதிவு, இதுபோன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு ஒரு நம்பிக்கையூட்டும் செய்தியாக அமைந்துள்ளது. மேலும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர்களின் கண்ணீரைத் துடைக்கும் வகையில், அவர்களுக்கு ஆதரவாக ஒரு அமைப்பு உருவாகும் பட்சத்தில், அது பல குடும்பங்களுக்குப் பேருதவியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version