தங்கம் விலை உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

தங்கம் விலையில் தினசரி ஏற்படும் திடீர் ஏற்ற இறக்கங்கள் இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம், உலகப் பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு போன்ற பல்வேறு காரணிகள் இந்த விலை மாற்றங்களுக்கு காரணமாகக் கூறப்படுகின்றன. இருப்பினும், கச்சா எண்ணெய் விலை குறையும் வரை தங்கத்தின் விலையில் பெரிய அளவிலான ஏற்றம் இருக்காது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உலக சந்தையில் அமெரிக்க டாலரின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதனால், பல நாடுகள் தற்காலிகமாக தங்கத்தை வாங்குவதை நிறுத்தியுள்ளன. இதுவும் தங்கத்தின் விலை குறைவதற்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இன்று (ஜூன் 15) ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்துள்ளது. நேற்று (ஜூன் 14) ஒரு சவரன் தங்கம் ரூ.1,10,880க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.1,12,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.13,860க்கு விற்பனையானது. இன்று ரூ.210 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,070க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2,80,000க்கு விற்பனையாகிறது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version