MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தர்ம முனிஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - க்ரைம் - தர்ம முனிஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

க்ரைம்

தர்ம முனிஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

Admin
Last updated: மே 25, 2026 1:34 மணி
Admin
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் பிளஸ் டூ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தர்ம முனிஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி, வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி ஒருவர் வீட்டில் இருந்து அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றபோது காணாமல் போனார். அடுத்த நாள், மார்ச் 11ஆம் தேதி, அவர் காட்டுப்பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, உடலில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தை அடுத்து, கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அலட்சியமாக செயல்பட்டதாக மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரவீனா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

காற்றாலை கோபுர சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனிஸ்வரனை மார்ச் 19ஆம் தேதி கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி, சம்பவத்தை நடித்துக் காட்ட வைத்து வீடியோ பதிவு செய்யப்பட்டது. குற்றவாளி கைது செய்யப்பட்டதை அடுத்து, மாணவியின் குடும்பத்தினர் அவரது சடலத்தை பெற்று 10 நாட்களுக்குப் பிறகு தகனம் செய்தனர்.

இந்த வழக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விரைந்து செயல்பட்ட போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். பல்வேறு சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. அனைத்து விசாரணை நடைமுறைகளும் நிறைவடைந்த நிலையில், மே 25ஆம் தேதி திங்கட்கிழமை, தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா தீர்ப்பு வழங்கினார். கொலை வழக்கில் குற்றவாளி தர்ம முனிஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:MurderPOCSOThoothukudiஇரட்டை தூக்கு தண்டனைகொலைதூத்துக்குடிபோக்சோ
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னையில் ஒரே நாளில் 84 பேர் கைது: 45 ரவுடிகள் உட்பட போதைப்பொருள் பறிமுதல்
Next Article நகை, பணம் திருடிய மருமகன் உட்பட 3 பேர் கைது: வண்டலூர் சம்பவம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பையில் கனமழையால் இடிந்து விழுந்த குடியிருப்பு கட்டிடம்

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழந்தனர்.…

ஜூலை 6, 2026

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி…

ஜூலை 6, 2026

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

கட்டாயத்திற்கு மறுத்த இளம்பெண்ணை வெட்டிக்கொன்ற முதியவர்!

சிதம்பரம் அருகே, ஆசைக்கு மறுத்த இளம்பெண் காமாட்சியை அரிவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில் மகேந்திரன் என்ற முதியவர் கைது. தடுக்க முயன்ற தந்தையையும் தாக்கிவிட்டு தப்பியோடிய…

1 Min Read
தமிழ்நாடு

இன்ஸ்டாகிராம் காதல்: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

கோவை அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய வாலிபரால் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 17 வயது சிறுமி மீட்கப்பட்டார். இது தொடர்பாக வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ்…

1 Min Read
தமிழ்நாடு

தர்மபுரியில் கடன் பிரச்சினை: மனைவி, மகளை கொன்று திமுக பிரமுகர் தற்கொலை

தர்மபுரியில் கடன் பிரச்சினை காரணமாக, தி.மு.க. பிரமுகர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகளை கொலை செய்துவிட்டு, ஓடும் லாரியில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

1 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை: ரூ.55,900 பறிமுதல்

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில், 5 இடைத்தரகர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.55,900 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?