செங்கோட்டை குண்டுவெடிப்பு: AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட அதிர்ச்சி தகவல்

டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை தீவிரவாதிகள் பயன்படுத்தியிருப்பது தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக NIA, 7,500 பக்க குற்றப்பத்திரிக்கையை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

விசாரணையில், உயிரிழந்த மருத்துவர் உமர் முகமதுவுக்கு, ஜசிர் பிலால் வானி என்ற நபர் வெடிகுண்டுகள் தயாரிப்பதில் உதவி செய்துள்ளார். இவர், 'அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த்' என்ற அல்-கொய்தாவுடன் தொடர்புடைய இயக்கத்தைச் சேர்ந்தவர். இவர், வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்கியுள்ளார். மேலும், இவர் அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் தங்கி வெடிகுண்டுகள் தயாரிக்கும் நுட்பங்களை வழங்கியுள்ளார்.

மருத்துவர் அடீல் அகமது, வெடிகுண்டுகள் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களை ஜசிர் பிலால் வானிக்கு வாங்கி கொடுத்துள்ளார். மருத்துவர் உமர், ராக்கெட் குண்டுகள் குறித்து ஆய்வு செய்து, அதன் தயாரிப்பு வழிமுறைகளை வழங்கியுள்ளார். ஜசிர், ராக்கெட் குண்டுகள் தயாரிப்பது எப்படி, அதன் வெடிமருந்து கலவை விகிதம் என்ன என்பது போன்ற விவரங்களை யூடியூப் மற்றும் சாட்ஜிபிடி போன்ற AI தளங்கள் மூலம் தேடி சேகரித்துள்ளார்.

இந்த தீவிரவாத கும்பல், வெடிகுண்டுகள் தயாரிக்க AI தளங்களை தவறாகப் பயன்படுத்தியுள்ளது. இவர்கள் தயாரித்த ராக்கெட் குண்டுகள், ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள காசிகுண்ட் வனப்பகுதியில் சோதனை செய்யப்பட்டுள்ளன. இவர்களது ஆயுதங்கள், தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் போல் மிக நுணுக்கமாக இருந்துள்ளன. விரிவான அறிவியல் மற்றும் தடயவியல் ஆய்வு மூலம் இந்த தீவிரவாதிகளின் பெரிய சதி வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக NIA தெரிவித்துள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version