காலை எழுந்தவுடன் ஒரு கப் சூடான காபி இல்லாமல் பலருக்கும் பொழுது விடியாது. உலகளவில் கோடிக்கணக்கான மக்களை அடிமையாக்கியுள்ள காபி, உடல் நலத்திற்கு நல்லதா கெட்டதா என்ற விவாதம் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இதய நோய் மற்றும் திடீர் மாரடைப்புக்கு காபி ஒரு காரணமாக இருக்கலாம் என்ற கருத்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால், இந்த கருத்துக்களை மறுக்கும் வகையில் லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழகம் ஒரு முக்கிய ஆய்வை நடத்தியுள்ளது. இந்த ஆய்வில் சுமார் 8,000 பேர் பங்கேற்றனர். தினசரி ஒரு கப், மூன்று கப், அல்லது பல கப் என வெவ்வேறு அளவுகளில் காபி அருந்துபவர்களைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் முடிவில், காபி அருந்துவதால் யாருக்கும் எந்தவிதமான உடல் பாதிப்பும் ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், ஒரு நாளைக்கு 25 கப் வரை காபி அருந்தினாலும் அதனால் எந்த பாதிப்பும் இல்லை என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் காபி பிரியர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.
காபி ஒரு உற்சாகமூட்டும் பானம் என்பதில் சந்தேகமில்லை. பல கோடி மக்களின் காலைப் பொழுதை சுறுசுறுப்பாக்கும் இந்த 'தேசிய பானம்' பாதுகாப்பாக இருப்பதாக வெளியான இந்த செய்தி, காபி பிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.