MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்: 5 முக்கிய கோரிக்கைகள்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்: 5 முக்கிய கோரிக்கைகள்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்: 5 முக்கிய கோரிக்கைகள்!

தமிழ்நாடு

பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்: 5 முக்கிய கோரிக்கைகள்!

Admin
Last updated: ஜூலை 2, 2026 7:13 காலை
Admin
Share
SHARE

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் ஒரு முக்கிய கடிதம் எழுதியுள்ளார். அதில், 'விக்சித் பாரத்—ரோஜ்கார் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமிண்) [VB-GRAMG]' திட்டத்தின் செயலாக்கம் குறித்து தனது கவலைகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார். இத்திட்டம் 01.07.2026 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் நிதிப் பகிர்வு முறை மற்றும் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள், மாநில அரசுக்கு 5,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கூடுதல் நிதிச் சுமையையும், செயல்பாட்டுரீதியான தாக்கங்களையும் ஏற்படுத்தும் என முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார். எனவே, ‘VBGRAMG சட்டம், 2025’-இன் சில விதிகளில் முக்கிய மாற்றங்களும் தளர்வுகளும் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு செய்யாவிடில், இத்திட்டத்தை திறம்பட செயல்படுத்துவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தைச் சார்ந்துள்ள மக்களை இது கடுமையாகப் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நிதிப்பகிர்வு முறையைப் பொறுத்தவரை, தற்போதைய வழிகாட்டுதல்களின்படி ஊதியம், கட்டுமானப் பொருட்கள் மற்றும் நிர்வாகச் செலவுகள் ஆகிய அனைத்திற்கும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே 60:40 என்ற விகிதம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS) கடந்த இரண்டு தசாப்தங்களாக வேறுபட்ட கட்டமைப்பின் கீழ் செயல்பட்டு வந்த நிலையில், இந்த திடீர் மாற்றம் மாநில கருவூலத்திற்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும். இதன் காரணமாக ஊதியம் மற்றும் வேலை நாட்கள் குறைய வாய்ப்புள்ளதுடன், பிற அத்தியாவசிய நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறையக்கூடும். எனவே, ஊதிய மற்றும் நிர்வாகச் செலவுகளைப் பொறுத்தவரையில் ஒன்றிய அரசின் 100% நிதியுதவியைத் தொடர வேண்டும் என்றும், கட்டுமானப் பொருட்கள் கூறுகளை ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே 75:25 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் முதல்வர் விஜய் கோரியுள்ளார்.

மேலும், இந்த திட்டத்தில் கிராம ஊராட்சிகளை வகைப்படுத்துவதற்கும், மாநில அளவிலான நிதி ஒதுக்கீட்டை பகிர்ந்தளிப்பதற்கும் முன்மொழியப்பட்டுள்ள ஒன்றிய அளவிலான வழிமுறைகள், மிக நுட்பமான நிர்வாக மேலாண்மையைக் கொண்டுவருவதாகவும், நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான கணக்கீடு அடிப்படையிலான அணுகுமுறை என்பது மாநிலத்தின் சமூகப் பொருளாதார பன்முகத் தன்மையைக் கணக்கில் கொள்ளத் தவறும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது சமச்சீரற்ற நிதியொதுக்கீட்டிற்கு வழிவகுக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்பதால், உள்ளூர் மற்றும் கள அளவிலான தேவைகளின் அடிப்படையில், மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வுக்கென தனிப்பட்ட வழிமுறையை உருவாக்க மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். முக்கிய வேளாண் பருவங்களை அறிவிப்பதிலும், கள அளவில் கூடுதல் நெகிழ்வுத்தன்மை தேவைப்படுவதால், ஒவ்வொரு நிதியாண்டிலும் முதன்மை விதைப்பு மற்றும் அறுவடைக் காலங்களை உள்ளடக்கிய 60 நாட்களை மாநில அரசு நிலையானதாக அறிவிக்க வேண்டும் என்றும், அக்காலகட்டத்தில் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இச்சட்டம் ஒன்றிய அரசின் ஊரக வீட்டு வசதித் திட்டங்களுடன் ஒருங்கிணைக்க அனுமதிக்கும் அதே வேளையில், மாநில அரசின் நிதியுதவியுடன் செயல்படும் வீட்டுவசதித் திட்டங்களை விலக்கி வைப்பதாக உள்ளது. பின்தங்கிய கிராமப்புற மற்றும் பழங்குடியின சமூகங்கள் கண்ணியத்துடன் வாழ்வதை நோக்கமாக கொண்டு, 'அனைவருக்கும் வீடு' என்பதை தமிழ்நாடு அரசு ஒரு முதன்மை நோக்கமாக கொண்டுள்ளதால், VB-GRAMG கட்டமைப்பின் கீழ் மாநில வீட்டு வசதித் திட்டங்களையும் சேர்த்து, இந்நலத்திட்ட இலக்குகளை கணிசமாக விரைவுபடுத்தி, அனைவருக்கும் வீடு கிடைப்பதை உறுதி செய்ய உதவ வேண்டும் என முதல்வர் விஜய் கோரியுள்ளார். ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு தொடர்ந்து தேசிய அளவில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது என்றும், இந்த முக்கிய மாற்றங்களுடன், இத்திட்டத்தை மேலும் சிறப்பாக தொலைநோக்குடன், அதிகளவு உள்ளூர் மக்கள் பயன்பெறும் வகையிலும், கிராமப்புற மேம்பாட்டில் தீவிரக் கவனத்துடனும் செயல்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனவே இந்த முன்மொழிவுகளை பிரதமர் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:VB-GRAMGகிராமப்புற வேலைவாய்ப்புதமிழ்நாடு அரசுபிரதமர் மோடிமுதல்வர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழகத்தில் ரூ.2500 எப்போது? முதலமைச்சர் விஜய்க்கு வானதி சீனிவாசன் கேள்வி
Next Article 02-07-2026 ராசி பலன்: நண்பர்களிடம் பகை, அனுசரித்து செல்வது நலம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மேற்கு வங்காளத்தின் முன்னாள் துணை சபாநாயகர்

மேற்கு வங்காள முன்னாள் துணை சபாநாயகர் தற்கொலை: அரசியலே தவறு என கடிதத்தில் அதிர்ச்சி

மேற்கு வங்காள முன்னாள் துணை சபாநாயகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…

ஆகஸ்ட் 16, 2026

ChatGPT உதவியுடன் இளைஞர் செருப்பை கண்டுபிடித்தார்

மத்திய பிரதேசத்தில், கோயிலுக்கு வெளியே குவிந்திருந்த ஆயிரக்கணக்கான…

ஆகஸ்ட் 16, 2026

செங்கோட்டைக்கு சென்ற மோடியை வழிமறித்த மயில்கள், விலங்குகள்!

பிரதமர் மோடி செங்கோட்டைக்குச் செல்லவிருந்த நிலையில், அவர்…

ஆகஸ்ட் 16, 2026

திருப்பதி ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியீடு: நவம்பர் மாத தரிசன கோட்டா அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதத்திற்கான ஆர்ஜித…

ஆகஸ்ட் 16, 2026

மேற்குவங்க முன்னாள் துணை சபாநாயகர் தற்கொலை: கடிதம் எழுதி வைப்பு

மேற்குவங்க சட்டப்பேரவையின் முன்னாள் துணை சபாநாயகர் ஆஷிஷ்…

ஆகஸ்ட் 16, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து வைகோ, அன்புமணி, சீமானை சந்தித்த முதலமைச்சர் விஜய்!

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், சட்டப்பேரவை நடவடிக்கைகளுக்கு பிறகு, அரசியல் நாகரிகத்தின் அடிப்படையில் இன்று முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில

1 Min Read
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு

கோவில் சொத்துக்கள்: ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்ப்பதாக தவெக அரசு மீது குற்றச்சாட்டு

ரூ.25,000 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்ப்பதாக தவெக அரசு மீது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினார்.

2 Min Read
தமிழ்நாடு

த.வெ.க அரசு அதிரடி: 60,000 டயர் டெண்டர் ரத்து!

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கான 60,000 டயர்கள் வாங்கும் மெகா டெண்டரை த.வெ.க அரசு திடீரென ரத்து செய்துள்ளது. ஏற்கனவே பேருந்துகள் வாங்கும் டெண்டர்களும் ரத்து செய்யப்பட்ட…

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் 21 வரை மழை: வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த 21-ஆம் தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?