சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்தபோது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். சட்டம் ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும், பெண்கள் பாதிக்கப்படுவதை யாராலும் சகித்துக் கொள்ள முடியாது என்றும், அதற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் முதல்வர் விஜய் தெரிவித்தார். ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ அதற்கான முதல் படி என்றும், போதைப்பொருளையும் கட்டுப்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
நான் குறிப்பிட்ட பிரச்சனைகள் பல வருடங்களாக கண்டுகொள்ளப்படாமல் விட்டவை என்றும், இன்று எதிர்க்கட்சிகள் அதை கேட்கும்போது பழிபோடும் அரசியலாகவே தெரிகிறது என்றும் முதல்வர் விஜய் குறிப்பிட்டார். போன ஆட்சியில் நடந்தவற்றுக்கு இப்போதுதான் விடை கண்டுகொண்டிருக்கிறோம் என்றும், சட்டம் ஒழுங்கை பற்றி தாராளமாக கேள்வி கேட்கலாம் என்றும், இது ஜனநாயக அரசு, மன்னர் ஆட்சி இல்லை, மனசாட்சி உள்ள மக்கள் ஆட்சி என்றார்.
நம் அரசின் நிர்வாகத் திறன் பற்றி பேசுபவர்களுக்கு, ‘ஊரை அடித்து உலையில் போட்டு’ ஊழல் மேல் ஊழலாக செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அதிலிருந்து தப்பிப்பதுதான் நிர்வாகத் திறன் என்று சொன்னால், அப்படிப்பட்ட ஊழல் செய்யும் நிர்வாகத் திறனை நம் அரசு ஒருபோதும் செய்யாது என்று முதல்வர் விஜய் சட்டசபையில் பேசினார். டாஸ்மாக்கில் கட்சி நிதி (PARTY FUND) என்று அடித்த கொள்ளை ஒவ்வொன்றாக கஜானாவிற்குள் சேர்த்துக் கொண்டிருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.
சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் உரையில் திமுக ஆட்சியில் நடைபெற்ற ‘party fund’ என குறிப்பிட்டதற்கு திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.