தமிழக முதல்வர் விஜய், வரும் ஜூன் 22-ந் தேதி தனது 52-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். நடிகராக பல ஆண்டுகள் பிறந்த நாள் கொண்டாடிய முதல்வர், முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு கொண்டாடும் முதல் பிறந்த நாள் இது என்பதால், இந்த முறை மிகவும் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளார்.
முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். அவருக்காக வியாசர்பாடி பகுதியில் எம்.எல்.ஏ. அலுவலகம் ஒன்று தயாராகி வருகிறது. இந்த அலுவலகத்தை, தனது பிறந்த நாளான வரும் 22-ந் தேதி திறந்து, தொகுதி மக்களுடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாட முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இனி மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட நாளை தொகுதி மக்களுக்காக ஒதுக்க முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் திட்டமிட்டுள்ளாராம். அன்றைய தினம், தொகுதி மக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்று, அதன் மீது விரைவாக உரிய நடவடிக்கை எடுக்கவும் அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, தனது பிறந்த நாளை தொகுதி மக்களுடன் கொண்டாடுவது, அவர்களின் குறைகளை நேரடியாக கேட்டறிவது என முதல்வர் விஜய்யின் இந்த புதிய முயற்சி பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது.