MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மாரியம்மன் கோவில் அருகே சர்ச் கட்ட ஐகோர்ட் தடை: உள்நோக்கம் இல்லை என கூற முடியாது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மாரியம்மன் கோவில் அருகே சர்ச் கட்ட ஐகோர்ட் தடை: உள்நோக்கம் இல்லை என கூற முடியாது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - மாரியம்மன் கோவில் அருகே சர்ச் கட்ட ஐகோர்ட் தடை: உள்நோக்கம் இல்லை என கூற முடியாது

லைஃப் ஸ்டைல்

மாரியம்மன் கோவில் அருகே சர்ச் கட்ட ஐகோர்ட் தடை: உள்நோக்கம் இல்லை என கூற முடியாது

Admin
Last updated: ஜூன் 19, 2026 9:46 காலை
Admin
Share
SHARE

கோவையில் மாரியம்மன் கோவிலுக்கு அருகில் சர்ச் கட்டுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த கட்டுமானத்தில் உள்நோக்கம் இல்லை என கூற முடியாது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காளப்பட்டியில் 150 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அருகில், 5 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தில் சி.எஸ்.ஐ. கிறிஸ்துவ சர்ச் கட்டும் பணி 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கு அப்பகுதி இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், அப்போதைய மாவட்ட ஆட்சியர் சர்ச் கட்ட அனுமதி வழங்கினார். இதற்கு எதிராக கோவில் நிர்வாகம் 2011 ஆம் ஆண்டு கோவை மாவட்ட முன்சிப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கு நிலுவையில் இருந்தபோதே கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. பக்தர்களின் கடும் எதிர்ப்பால், பணிகளை நிறுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனால் 13 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், தேவாலய நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2024 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கீழமை நீதிமன்றத்தில் வழக்கு முடிவடைந்த பின் சர்ச் கட்ட விண்ணப்பிக்க அனுமதி அளித்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, கடந்த மாதம் சர்ச் கட்டும் பணியை மீண்டும் தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சர்ச் கட்டுமானப் பணிக்கு தடை விதிக்கக் கோரி இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமிநாராயணன் அடங்கிய அமர்வு, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் டி.பாஸ்கர் வாதங்களை கேட்டறிந்தது. தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றதும், சில அடிப்படைவாத அமைப்புகள் துணிச்சல் பெற்றுள்ளன என்றும், கிராமங்களில் புதிதாக சர்ச்கள் கட்டப்பட வேண்டும் என வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். சபாநாயகர் பிரபாகர் கூட பதவியேற்பு நிகழ்ச்சியின்போது 'பைபிள்' வாசகங்களை மேற்கோள் காட்டியதாகவும், ஆயிரக்கணக்கான பைபிள் புத்தகங்களை வினியோகித்ததாகவும் கூறினார்.

கோவில் நகரமான மதுரையில் இருந்து தேர்வான எம்.எல்.ஏ., முஸ்தபா, 'சனாதன தர்மத்தை ஒழிப்பதே ஆளுங்கட்சியின் கொள்கை' என கூறியதாக மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. கிராமங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது தொடர்பான ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன. கோவை மத உணர்வு மிகுந்த நகரம் என்றும், இங்கு குண்டு வெடிப்பு மற்றும் மத கலவரங்கள் நடந்துள்ளன என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். முன்மொழியப்பட்ட சர்ச், தற்போதுள்ள மாரியம்மன் கோவிலுக்கு அருகில் அமையவுள்ளது. கோவில் அருகில் ஒரு பெரிய சர்ச் கட்ட முன்மொழியப்பட்டால், அதில் தீய நோக்கம் இருக்கக்கூடும் என்பதை மறுக்க முடியாது என நீதிபதிகள் கூறினர்.

சர்ச் கட்டப்படும் பகுதி அரசு புறம்போக்கு இடம் என்பதை வருவாய் பதிவேடு காட்டுவதாகவும், ஒரு தேவாலயம் அமைக்க அனுமதி வழங்கும் உத்தரவு இந்த அம்சத்தை கவனத்தில் கொள்ளவில்லை என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும்போது, கோவிலுக்கு அருகாமையில் சர்ச் கட்டுவதை அவர்கள் கடுமையாக எதிர்த்தால், அந்த எதிர்ப்பை சாதாரணமாக புறக்கணிக்கக் கூடாது என்றும், எதிர்மனுதாரர்கள் சர்ச் கட்ட காவல் துறை பாதுகாப்பை கோரியிருக்கக்கூடாது என்றும் கூறினர். 2010ல் சர்ச் கட்ட அனுமதி அளிக்கப்பட்டிருந்த போதிலும், 2011ல் அசல் வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால், 13 ஆண்டுகளாக கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை என்பதையும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

ஆட்சேபிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்த முற்படுவதால், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் சமூக நல்லிணக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும் என்றும் நீதிபதிகள் கூறினர். ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவும், எதிர்மனுதாரர்களுக்கு எதிராகவே உள்ளது என்றும், அரசியல் சூழல் மாறக்கூடும், ஆனால் சட்டத்தின் நிலை அதுவாகவே இருக்கும் வரை, அதை செயல்படுத்துவது நம் கடமை என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர். தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நிலுவை வழக்கு முடிந்த பின், சர்ச் கட்டுவதற்கு புதிய மனுவை சமர்ப்பிக்கலாம் என்று தெளிவுபடுத்தியுள்ளார். எனவே, நிலுவை வழக்கு முடிவடையும் வரை, தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்பதே அதன் வெளிப்படையான அர்த்தம். இந்த உத்தரவு இன்று வரை செல்லுபடியாகும். எனவே, சர்ச் கட்டும் விஷயத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ChurchMadras High CourtTempleகோவில்கோவைசர்ச்சென்னை உயர் நீதிமன்றம்தமிழ்நாடு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நெல்லை ரெயில் நிலைய மேம்பாடு: 30-க்குள் முடிக்க உத்தரவு
Next Article ஜீவா நடித்த ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தலைமை பொருளாதார ஆலோசகர் பேசுகிறார்

இலவச திட்டங்களால் பொருளாதாரம் பாதிக்கும்: தலைமை பொருளாதார ஆலோசகர்

தண்ணீருக்கு சரியான விலை நிர்ணயம் செய்தால் மட்டுமே அதை சேமித்து, அனைவருக்கும் கொண்டு…

ஆகஸ்ட் 4, 2026

இந்திய ரயில்வே சாதனை: ஜூலையில் 14 கோடி டன் சரக்குகள் கையாளப்பட்டது

இந்திய ரயில்வே ஜூலை மாதத்தில் 14 கோடி…

ஆகஸ்ட் 4, 2026

மேகதாது அணைக்கு தடை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு

மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது…

ஆகஸ்ட் 3, 2026

பிரிஜ் பூஷன் விடுவிப்பை எதிர்த்து மேல்முறையீடு: வினேஷ் போகத் அறிவிப்பு

மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில்…

ஆகஸ்ட் 3, 2026

ராஞ்சியில் மாணவர் போராட்டம்: தொலைதூர நகரங்களில் இருந்து ஆன்லைன் உணவு டெலிவரி!

ராஞ்சியில் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து போராடும் மாணவர்களுக்கு…

ஆகஸ்ட் 3, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

பாட்னாவில் நகைக்கடை கொள்ளை முயற்சி: சிறுமிகள் கைது

பாட்னாவில் பட்டப்பகலில் நகைக்கடைக்குள் மிளகு ஸ்ப்ரேயுடன் நுழைந்து தங்க நகைகளை கொள்ளையடிக்க முயன்ற இரண்டு சிறுமிகள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
இந்தியா

நீட் தேர்வு எதிர்ப்பு: வைரலான இரு மாணவிகளின் புகைப்படங்கள்!

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. களத்தில் எடுக்கப்பட்ட இரு மாணவிகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, போராட்டத்திற்கு வலுசேர்த்து வருகின்றன.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு: கோழிக்கோடு நபர் ஒருவருக்கு தொற்று உறுதி

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் 43 வயது நபருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஈரான் அணு ஒப்பந்தம்: டிரம்ப் எச்சரிக்கை – இராணுவ நடவடிக்கை தயார்

ஈரான் அணு ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒப்பந்தம் இல்லையெனில் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?