திருச்சி கிழக்கு தொகுதி- எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிட்டார். இந்த இரு தொகுதிகளிலும் விஜய் அபார வெற்றார். இதையடுத்து இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார்.

தலைமைச் செயலகத்தில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையில் முதலமைச்சர் விஜய் ஈடுபட்டார். இதன்பின், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்துள்ளார்.

திருச்சி கிழக்கு ராஜினாமா கடிதத்தை சட்டசபை செயலாளரிடம் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் வழங்கினார்.

முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்துள்ளதால் விரைவில் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version