MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சென்னையில் அதிர்ச்சி: ஒரே வீட்டை 90 பேருக்கு காட்டி லீஸ் மோசடி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - சென்னையில் அதிர்ச்சி: ஒரே வீட்டை 90 பேருக்கு காட்டி லீஸ் மோசடி!

லைஃப் ஸ்டைல்

சென்னையில் அதிர்ச்சி: ஒரே வீட்டை 90 பேருக்கு காட்டி லீஸ் மோசடி!

Admin
Last updated: ஜூன் 14, 2026 3:52 மணி
Admin
Share
SHARE

சென்னையை உலுக்கியுள்ள லீஸ் மோசடி சம்பவம், மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே வீட்டை 90 பேருக்கு காட்டி, லட்சக்கணக்கில் பணம் பறித்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பள்ளிக்கரணையைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் வெண்ணிலா, ஒரு வருடத்திற்கு முன்பு வேளச்சேரியில் வீடு லீசுக்கு தேடியுள்ளார். அப்போது OLX இணையதளத்தில் 7 லட்ச ரூபாய்க்கு ஒரு வீடு இருப்பதை பார்த்து, அதில் குறிப்பிட்டிருந்த எண்ணில் தொடர்பு கொண்டுள்ளார். வீட்டை நேரில் பார்த்து பிடித்த வெண்ணிலா, அக்பர் ஷெரிப் என்பவரிடம் பணத்தை கொடுத்துள்ளார். ஒரு வாரத்தில் வீட்டை பெயிண்ட் அடித்து தருவதாகக் கூறிய அக்பர் ஷெரிப், பல வாரங்கள் ஆகியும் வீட்டை தரவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வெண்ணிலா, வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விசாரணையில், வீட்டின் உரிமையாளர் அக்பர் ஷெரிப், கட்டப்பஞ்சாயத்து கும்பலுடன் சேர்ந்து இந்த துணிகர மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஒரே வீட்டை 90 பேருக்கு காட்டி, கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்துள்ளார். இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட அனைவரும், காவல் ஆணையரை சந்திக்க அனுமதிக்கப்படாததால் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேளச்சேரி காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

கோடி கோடியாக மோசடி செய்துவிட்டு பள்ளிக்கரணையில் பங்களா கட்டுவதாகக் கூறும் மக்கள், சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் உள்ள அனைவரும் விலைபோய்விட்டதாகவும், மோசடி கும்பலுக்கு உடந்தையாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினர். ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் இந்த மோசடியை காவல்துறை வேடிக்கை பார்க்கிறதா? என பாதிக்கப்பட்டவர்கள் வேதனையுடன் கேள்வி எழுப்பினர். லீஸ் விவகாரத்தில் சுமார் ரூ.4.50 கோடி அளவுக்கு மோசடி செய்துவிட்டு வெளியில் நடமாடும் மோசடி கும்பலை போலீசார் கைது செய்யவில்லை என்றும், தாங்களும் இதேபோல் மோசடி செய்யலாமா என போலீஸ் அனுமதிக்குமா எனவும் பாதிக்கப்பட்டவர்கள் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினர். 4 ஆண்டுகளாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும், ஊடகவியலாளர்கள் தலையிட்ட பிறகே இந்த வீடு லீஸ் மோசடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததாகவும் மக்கள் தெரிவித்தனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai Fraudசாலை மறியல்சென்னைலீஸ் மோசடிவீடு மோசடிவேளச்சேரி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஆகஸ்டில் புதுச்சேரி சட்டமன்றம்: மீனவர்களுக்கு முதல்வர் வாழ்த்து
Next Article மோகன்லாலின் ‘திரிஷ்யம் 3’ – 24 நாட்களில் ரூ.330 கோடி வசூல்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

நடிகை திரிஷாவின் இளமை ரகசியம் அம்பலம்!

நடிகை திரிஷாவின் இளமை தோற்றத்திற்கு என்ன காரணம் என்ற ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

பேனர், கட்-அவுட் கூடாது: ரீல்ஸ் எடுப்போர் மீது நடவடிக்கை – புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை

முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பேனர்கள், கட்-அவுட்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும். ரீல்ஸ் எடுப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எச்சரித்துள்ளார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

இன்று, நாளை கனமழை: 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 10 மாவட்டங்களுக்கு இன்று, 13 மாவட்டங்களுக்கு…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

போதைக்கு எதிராக 6 கி.மீ மாரத்தான்: தமிழக அரசு அறிவிப்பு

ஜூன் 26 அன்று சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, தமிழக அரசு 'ஸ்டாப் Run, ஸ்டாப் Drugs' என்ற பெயரில் 6 கி.மீ. மாரத்தான் போட்டியை…

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?