சண்டிகரில் உள்ள செக்டர் 11 பகுதியில் செயல்பட்டு வரும் மெடிக்கல் கடையில் பயங்கரம் அரங்கேறியுள்ளது. கடையில் இருந்த காசாளர் ஜான்கி என்பவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக 13 முறை சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஜான்கி, அந்த மெடிக்கல் ஷாப்பில் காசாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று, இருவர் முகமூடி அணிந்து கடைக்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் ஜான்கியை நோக்கி துப்பாக்கியால் 13 முறை சுட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவத்திற்குப் பிறகு, குற்றவாளிகள் இருவரும் பைக்கில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். கொலை நடந்த மெடிக்கல் ஷாப்பில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதன் மூலம் குற்றவாளிகளை அடையாளம் கண்டு பிடிக்கவும், அவர்கள் பயன்படுத்திய பைக் குறித்த தகவல்களை சேகரிக்கவும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.