MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சிபிஎஸ்இ மதிப்பீட்டு முறை பாரபட்சமானது: உச்ச நீதிமன்றத்தில் பிளஸ் 2 மாணவர்கள் முறையீடு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சிபிஎஸ்இ மதிப்பீட்டு முறை பாரபட்சமானது: உச்ச நீதிமன்றத்தில் பிளஸ் 2 மாணவர்கள் முறையீடு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - கல்வி & வேலைவாய்ப்பு - சிபிஎஸ்இ மதிப்பீட்டு முறை பாரபட்சமானது: உச்ச நீதிமன்றத்தில் பிளஸ் 2 மாணவர்கள் முறையீடு

கல்வி & வேலைவாய்ப்பு

சிபிஎஸ்இ மதிப்பீட்டு முறை பாரபட்சமானது: உச்ச நீதிமன்றத்தில் பிளஸ் 2 மாணவர்கள் முறையீடு

Sri Prem Kumar R
Last updated: ஜூலை 9, 2026 2:37 மணி
Sri Prem Kumar R
Share
உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மதிப்பீட்டு முறைக்கு எதிராக மாணவர்கள் தாக்கல் செய்த மனு
சிபிஎஸ்இ மதிப்பீட்டு முறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் முறையீடு
SHARE

வளைகுடா நாடுகளில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வகுத்துள்ள மதிப்பீட்டு முறை பாரபட்சமானது என்றும், இதில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் முறையிட்டுள்ளனர். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்க ஒப்புக்கொண்டது.

நீதிபதிகள் கே.வி. விஸ்வநாதன் மற்றும் அலோக் ஆராதே அடங்கிய அமர்வு, 30 பள்ளி மாணவர் கள் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்இக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட தனித்தேர்வர்கள் தொடர்பாக கடந்த ஜூன் 21 அன்று வெளியிடப்பட்ட மதிப்பீட்டு கொள்கையை எதிர்த்து 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தாக்கல் செய்த தனி மனுவுக்கும் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ் கிஷோர் சௌதரி, சிபிஎஸ்இ வகுத்துள்ள மதிப்பீட்டு முறையில் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். மனுக்களின் நகல்களை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அலுவலகத்துக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் வினீத் ஜிந்தாலும் ஆஜரானார்.

மாணவர்களின் முக்கிய கோரிக்கைகளாக, மார்ச் 27 அன்று அறிவிக்கப்பட்ட மதிப்பீட்டு முறை பாரபட்சமாகவும், நியாயமற்றதாகவும் இருப்பதால் அதை ரத்து செய்ய வேண்டும் அல்லது மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சிபிஎஸ்இ மதிப்பீட்டு முறை வெளிப்படையாகவும், அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பை வழங்குவதாகவும் இருக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் மீண்டும் ஒரு சிறப்புத் தேர்வை நடத்த வேண்டும் என்றும், சிறப்புத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அல்லது முந்தைய மதிப்பீட்டு முறையின் மதிப்பெண் – இதில் எது மாணவர்களுக்குச் சாதகமாக உள்ளதோ, அதைத் தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, கடந்த ஜூன் 22ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், வளைகுடா பகுதியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட தனித்தேர்வர்களுக்காக சிபிஎஸ்இ புதிய மதிப்பீட்டு கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளதாக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

வளைகுடா நாடுகளில் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என இரண்டு குழுக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களுக்குப் பள்ளி அளவிலான உள்மதிப்பீட்டுத் தேர்வு பதிவுகள் இருப்பதால், அவற்றை வைத்து மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஆனால், தனித்தேர்வர்களுக்கு உள்மதிப்பீட்டுப் பதிவுகள் இல்லாததால், அவர்களுக்கென ஜூன் 21 அன்று புதிய சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன்படி, தனித்தேர்வர்களுக்கு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற கோட்பாட்டுத் தேர்வு மதிப்பெண்களில் 40 சதவீதமும், தேர்வர் கடைசியாக எழுதிய 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற கோட்பாட்டுத் தேர்வு மதிப்பெண்களில் 60 சதவீதமும் என்ற விகிதத்தில் மதிப்பெண்கள் கணக்கிடப்படும். இந்த முறையையும் எதிர்த்துத் தனித்தேர்வர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். மாணவர்களின் கல்வி எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அடுத்தகட்ட விசாரணை வரும் ஜூலை 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CBSEEvaluation MethodGulf StudentsPlus 2Supreme Courtஉச்ச நீதிமன்றம்சிபிஎஸ்இபிளஸ் 2மதிப்பீட்டு முறைவளைகுடா மாணவர்கள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நாடாளுமன்ற நிலைக்குழு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பரிந்துரைக்கிறது ஆயுஷ்மான் பாரத் காப்பீடு: ரூ.10 லட்சமாக உயர்வு?
Next Article திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கர்நாடக அமைச்சர் பேச்சுக்கு ஸ்டாலின் பதில் என்ன? – உதயநிதி கேள்வி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி சாய் பகீரத்

போக்சோ வழக்கு: மத்திய இணை அமைச்சர் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய்…

ஜூலை 9, 2026

வெள்ளத்தில் கர்ப்பிணிக்கு உதவிய கிராம மக்கள்: வீட்டுக் கதவே பாலமானது!

மும்பையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணை, கிராம…

ஜூலை 9, 2026

வயநாடு நிலச்சரிவு: மேலும் ஒரு சடலம் மீட்பு – பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில்…

ஜூலை 9, 2026

காவிரி நீர் வழங்க முடியாது: கர்நாடக அமைச்சர் திட்டவட்டம்

கர்நாடகாவில் போதிய மழை இல்லாததாலும், அணைகளில் நீர்…

ஜூலை 9, 2026

வட மாநிலங்களில் கனமழை: போக்குவரத்து ஸ்தம்பித்தது

டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில்…

ஜூலை 9, 2026

You Might Also Like

தி.மு.க. அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி
தமிழ்நாடு

கரூர் சம்பவம்: உச்ச நீதிமன்றக் குழுவிடம் ஆர்.எஸ்.பாரதி மனு

கரூர் நெரிசல் சம்பவம்: சி.பி.ஐ. விசாரணையில் தலையீடு கூடாது - உச்ச நீதிமன்றக் குழுவிடம் ஆர்.எஸ்.பாரதி மனு.

2 Min Read
கல்வி & வேலைவாய்ப்பு

5 ஆண்டு சட்டப்படிப்பு: அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இன்று முதல் விண்ணப்பம்!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மே 18 முதல் ஜூன் 5 வரை ஆன்லைனில் நடைபெறும்.

1 Min Read
தமிழ்நாடு

செல்போன் பார்த்த மாணவி: தந்தையின் கண்டிப்பால் எடுத்த விபரீத முடிவு

செல்போனைப் பார்த்த மாணவியை தந்தை கண்டித்ததால், மனமுடைந்த பிளஸ் 2 மாணவி விபரீத முடிவை எடுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Min Read
இந்தியா

உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு – குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ல் இருந்து 38 ஆக உயர்த்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க இந்த…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?