புதுச்சேரியில் இருந்து நிஜமாகவே 4.5 லிட்டர் மது கொண்டுவரலாமா? – அரசாணையில் அப்படித்தான் இருக்கிறதா?
- Published by:
Last Updated:Apr 27, 2026 6:26 PM ISTபுதுச்சேரியில் இருந்து ஒருவர் 4.5 லிட்டர் மது கொண்டுவரலாம் என தகவல் பரவி வருகிறது. இது உண்மையா? அரசாணையில் இருப்பது என்ன தெரியுமா?
+ Follow usOn Google1/7

புதுச்சேரியில் இருந்து ஒருவர் எவ்வளவு மது எடுத்துவரலாம் என்பது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே ஒருவர் தன் சொந்த பயன்பாட்டிற்காக 4.5 லிட்டர் மதுவை கொண்டுவரலாம் என சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. உண்மையில் சட்டம் சொல்வது என்ன? நீதிமன்றத் தீர்ப்பு என்ன? புதுச்சேரியில் இருந்து மதுவை தமிழ்நாட்டிற்குள் கொண்டுவரலாமா?advertisement2/7
புதுச்சேரி – தமிழ்நாடு எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் காவல்துறை சோதனை வழக்கமாக நடைபெறும். அப்போது யாரேனும் சட்ட விரோதமாக மதுவைக் கொண்டுவந்தால், அவர்களிடம் இருந்து மது பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்படும்.advertisement3/7
அதுபோல், கடலூர் மாவட்டம், ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது காட்டுமயிலூர் பகுதியைச் சேர்ந்த வல்லரசு என்பவரின் வாகனத்தை சோதனை செய்தபோது, அவரிடம் 1.6 லிட்டர் மது இருந்தது. இதனை பறிமுதல் செய்த காவல்துறை அவர் மீது வழக்குப் பதிவு செய்தது.advertisement4/7
இதுதொடர்பான வழக்கு விசாரணை கடலூர் விரைவு நீதிமன்றத்தில் நடந்துவந்த சூழலில், வல்லரசு சென்னை உயர்நீதிமன்றத்தில், தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய முறையீடு செய்தார். அந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி எம். நிர்மல்குமார் முன் விசாரிக்கப்பட்டது.advertisement5/7
மனுதாரர் தரப்பில், ‘சொந்த நுகர்வுக்காக ஒருவர், 4.5 லிட்டர் வரை மது வைத்திருக்க அனுமதி அளித்து கடந்த 2017ல் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. எனவே வல்லரசு மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, வல்லரசு மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.advertisement6/7
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஒருவர் புதுச்சேரியில் இருந்து 4.5 லிட்டர் மது கொண்டுவரலாம், அரசாணை இருக்கிறது, நீதிமன்றம் தீர்ப்பு இருக்கிறது என பரவலாக பகிரப்பட்டுவருகிறது. ஆனால், புதுச்சேரியில் இருந்து 90 மில்லி மதுபாட்டில் எடுத்து வந்தாலும் கைது தான் என தமிழ்நாடு போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு என்ன காரணம்? அரசாணை என்ன ஆனது என்பதை பார்ப்போம்.advertisement7/7
இது தொடர்பாக கடலூர் மாவட்ட மது விலக்கு காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “சொந்த பயன்பாட்டுக்காக ஒருவர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம் எனும் அரசாணை 2025ல் திருத்தப்பட்டது. சமீபத்திய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, புதுச்சேரியில் இருந்து 90 மி.லி. மதுபானம் எடுத்துவந்தாலும் கைது நடவடிக்கை பாயும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.