கடலில் தம்பியை காப்பாற்ற முயன்று அண்ணன் பரிதாப பலி

சென்னையின் மெரினா கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது, அலையில் சிக்கிய தனது தம்பியை காப்பாற்ற முயன்ற அண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பின்னர் கரை ஒதுங்கியது.

ஆவடியை சேர்ந்த தேவகி என்பவர், தனது மகன்கள் சுதர்சன் (16) மற்றும் கமலேஷ் (15) ஆகியோருடன் கடந்த 22 ஆம் தேதி மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார். கண்ணகி சிலை பின்புறம் உள்ள கடலில் இருவரும் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் தம்பி கமலேஷ் சிக்கிக் கொண்டார். இதைக் கண்ட அண்ணன் சுதர்சன், தனது தம்பியின் கையைப் பிடித்து இழுத்து காப்பாற்றியுள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக அவரே கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மெரினா காவல்துறையினர், மீனவர்களின் உதவியுடன் படகில் சென்று சுதர்சனை தேடும் பணியில் ஈடுபட்டனர். கடலோர காவல் குழுமத்தினரும் தேடுதல் பணியில் இணைந்தனர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு, சிறுவனின் உடல் நேற்று முன்தினம் இரவு துறைமுகம் பகுதியில் கரை ஒதுங்கியது. காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version