MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கால் விரல்கள் போனது, பணமில்லை: பாவா லட்சுமணன் உருக்கமான பேட்டி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > கால் விரல்கள் போனது, பணமில்லை: பாவா லட்சுமணன் உருக்கமான பேட்டி
தமிழ்நாடு

கால் விரல்கள் போனது, பணமில்லை: பாவா லட்சுமணன் உருக்கமான பேட்டி

Admin
Last updated: June 30, 2026 11:04 am
Admin
Share
SHARE

தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் இருந்தாலும், இவரின் நகைச்சுவைக்கு தனி வரவேற்பு உண்டு. வடிவேலுடன் இவர் நடித்த 'மாயி' படத்தின் காமெடி காட்சிகள் இன்றும் பலரால் ரசிக்கப்படுகிறது. 'வாம்மா மின்னல்' என இவர் அடித்த காமெடி பலரின் ஃபேவரைட். யாருக்காவது ஜாமீன் கிடைக்கவில்லை என்றால், 'வாளமீன் இருக்குங்குறாங்க வஞ்சிர மீன் இருக்குங்குறாங்க. ஆனா, ஜாமீன் மட்டும் இல்லைங்குறாங்க' என்ற இவரது வசனத்தை மீம்ஸ்களாக நெட்டிசன்கள் வைரலாக்குவார்கள்.

அப்படிப்பட்ட நடிகர் பாவா லட்சுமணன் தற்போது நீரிழிவு நோயாலும், பொருளாதார நெருக்கடியாலும் பாதிக்கப்பட்டு தவித்து வருகிறார். உடல்நலப் பிரச்சினையால் அவரது கால் விரல்களில் சில அகற்றப்பட்டதாகவும், இதனால் திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததாகவும் அவர் பல்வேறு பேட்டிகளில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒரு விபத்துக்குப் பிறகு ஏற்பட்ட தொற்று காரணமாக காலில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், தன்னால் நடக்க முடியாது என்ற வதந்தி பரவியதால் வாய்ப்புகள் குறைந்ததாகவும் பாவா லட்சுமணன் கூறியிருந்தார்.

தற்போது நிரந்தரமாக தங்குவதற்கு வீடுகூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்து வருவதாகவும் அவர் கண்ணீருடன் தெரிவித்திருந்தார். அவரது நிலை குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து பலரும் உதவிக்கரம் நீட்டத் தொடங்கினர். முக்கியமாக, லெஜண்ட் சரவணன் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இது திரையுலகில் வரவேற்பைப் பெற்றுள்ளது. மருத்துவச் செலவுகளுக்காக வழங்கப்பட்ட இந்தத் தொகை, தற்போது சிகிச்சை பெற்று வரும் பாவா லட்சுமணனுக்கு உடனடி உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

குடும்பத்தைப் பற்றி பேசிய அவர், 'எனக்குத் திருமணமே ஆகவில்லை; ஒருவேளை மனைவி, பிள்ளைகள் என்று குடும்பம் இருந்திருந்தால் நான் ஏன் மற்றவர்களிடம் கையேந்தி உதவி கேட்கப் போறேன்? எனக்கு இருக்கும் ஒரேயொரு அக்காவும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பொருளாதார வசதியுடன் இல்லை. வேறு வழியின்றி திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் எனக்கு ஏதாவது உதவி செய்ய மாட்டார்களா என்று ஆவலோடு எதிர்பார்க்கிறேன்' எனத் தனது தற்போதைய வறுமை நிலை மற்றும் தனிமை குறித்து உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:உதவிதமிழ் சினிமாநடிகர்நடிகர் நலன்பாவா லட்சுமணன்லெஜண்ட் சரவணன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு: இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு
Next Article கேரளாவில் எலிக்காய்ச்சல்: 2 பேர் பலி, 9 பேருக்கு தீவிர சிகிச்சை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நாளை முதல் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு கட்டுப்பாடு இல்லை

மத்திய அரசு நாளை முதல் பெட்ரோல், டீசல் விற்பனை மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும்…

June 30, 2026

பாஸ்போர்ட் முதல் ஆதார் வரை கட்டணம் உயர்வு – நாளை முதல் அமல்!

நாளை முதல் பாஸ்போர்ட் மற்றும் ஆதார் சேவைகளுக்கான…

June 30, 2026

பிரதமர் மோடி இன்று மத்திய செயலாளர்களுடன் ஆலோசனை

சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்து மத்திய அரசு செயலாளர்களுடன்…

June 30, 2026

காதலித்து உல்லாசம் பலாத்காரம் ஆகாது: ஐகோர்ட்டு

திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக…

June 30, 2026

கிரிக்கெட் வீரர் சஷாங் சிங், தந்தை மீது வழக்கு பதிவு

வீட்டு சமையல்காரரை அடித்து துன்புறுத்தியதாக கிரிக்கெட் வீரர்…

June 30, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ஊட்டி மலர் கண்காட்சி: 10 லட்சம் நாற்றுகள், 26 அலங்காரங்கள்!

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 128-வது மலர் கண்காட்சி இன்று தொடங்கி 11 நாட்கள் நடைபெறுகிறது. 10 லட்சம் மலர் நாற்றுகள், 26 சிறப்பு அலங்காரங்களுடன் களைகட்டுகிறது.

2 Min Read
தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: முதல்வர் விஜய் கண்டனம்!

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ₹3 உயர்வால் மக்கள் பாதிப்படைவார்கள் என முதலமைச்சர் ஜோசப் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தல்.

1 Min Read
தமிழ்நாடு

போதை கலாசாரத்தை தடுக்கவே தெரியும்: முதல்வர் விஜய்

போதை கலாசாரத்தை தடுக்கவே தெரியும், அதை வளர்க்க தெரியாது என முதல்-அமைச்சர் விஜய் சட்டசபையில் தெரிவித்தார். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக செயல்படுவதாக அவர் கூறினார்.

1 Min Read
தமிழ்நாடு

த.வெ.க. அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசு, இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்கிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?