ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக, மர்ம கும்பலை பிடிக்க சிறப்பு போலீஸ் படைகள் களமிறங்கியுள்ளன.
டிபத்ரி சாலையில் இருந்த எஸ்பிஐ வங்கி ஏடிஎம் இயந்திரத்தை மர்ம கும்பல் ஒன்று தூக்கிச் சென்றுள்ளது. பின்னர், மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு வெறிச்சோடிய இடத்தில் அந்த இயந்திரத்தை உடைத்து, அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்த துணிகர சம்பவத்தை அடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், மோப்ப நாய்கள் உதவியுடனும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ஏடிஎம் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.