மகாராஷ்டிராவின் நாக்கா பகுதியில் உள்ள ஹிட்டாச்சி ஏடிஎம் இயந்திரத்தில் ஒரு அசாதாரண சம்பவம் நிகழ்ந்துள்ளது. வாடிக்கையாளர் ஒருவர் வெறும் 100 ரூபாய் எடுக்க முயன்றபோது, இயந்திரம் 500 ரூபாய் நோட்டுகளை வழங்கியுள்ளது. அவரது வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டது 100 ரூபாய் மட்டுமே. இந்தத் தகவல் பரவியதும், அப்பகுதி மக்கள் ஏடிஎம்-ல் பணம் எடுக்கக் குவிந்தனர்.
மேலும் ஒருவர் 400 ரூபாய் எடுக்க முயன்றபோது, அவருக்கு 500 ரூபாய் நோட்டுகள் நான்கு வந்துள்ளன. இதனால் அவர் ஒரே நேரத்தில் 2,000 ரூபாயைப் பெற்றுள்ளார். இந்த அதிசயத் தகவல் காட்டுத்தீ போலப் பரவ, ஏடிஎம் இயந்திரத்தின் முன் மக்கள் கூட்டம் அலைமோதியது. அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு பணம் எடுக்கத் தொடங்கினர்.
சம்பவத்தை அறிந்த போலீசார் உடனடியாக ஏடிஎம் மையத்திற்கு விரைந்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்து, மக்களை அனுப்பி வைத்தனர். இது குறித்து வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். வங்கி அதிகாரிகள், தொழில்நுட்பக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
இந்தப் பிரச்சனை சரிசெய்யப்பட்ட பின்னரே ஏடிஎம் சேவைகள் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் இது போன்ற சம்பவங்கள் நடப்பது ஒன்றும் புதிதல்ல என்றும், 100 ரூபாய் நோட்டுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வருவதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.