MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தமிழ்நாடு

உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Admin
Last updated: June 28, 2026 1:03 pm
Admin
Share
SHARE

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிட்டத்தட்ட 25 வருட இடைவெளிக்குப் பிறகு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சுமார் 2,708 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் மொத்தம் 42,064 தேர்வர்கள் பங்கேற்றனர். தமிழ் மொழிக்கான தேர்வு தவிர, 150 மதிப்பெண்களுக்கான பாடம் சார்ந்த புறநிலை வினாக்கள் பகுதி மற்றும் 50 மதிப்பெண்களுக்கான விளக்கக் கட்டுரைத் தாள் தேர்வு நடைபெற்றது.

உதவிப் பேராசிரியர் எழுத்துத் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 25.6.2026 அன்று அறிவித்ததைத் தொடர்ந்து, விளக்கக் கட்டுரைகளின் மதிப்பீட்டில் பெரும் அளவிலான முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. புறநிலை வினாத்தாளில் அதிக மதிப்பெண் பெற்ற பல தேர்வர்கள், விளக்கக் கட்டுரைப் பிரிவு தேர்வில் ‘0’ மதிப்பெண் மற்றும் ஒரு மதிப்பெண் பெற்றுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, புறநிலை வினாத்தாளில் 150-க்கு 111 மதிப்பெண் பெற்ற தமிழ் பிரிவைச் சேர்ந்த ஒரு தேர்வருக்கு, கட்டுரைத் தாளில் பூஜ்ஜிய மதிப்பெண் வழங்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு நேர்மாறாக, புறநிலை வினாத்தாளில் குறைந்த மதிப்பெண்களைப் பெற்ற தேர்வர்களுக்கு, 50 மதிப்பெண்களுக்கான விளக்கக் கட்டுரை மதிப்பீட்டில், 50-க்கு 49 வரை அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகவும், இது அவர்களின் இறுதித் தரவரிசையை மாற்றியமைத்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

'புறநிலை வினாத்தாளில் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற ஒரு தேர்வர், விளக்கமுறை வினாத்தாளில் எப்படி பூஜ்ஜியம் மதிப்பெண் பெற முடியும்? அல்லது இதற்கு நேர்மாறாக எப்படி நடக்க முடியும்? மதிப்பெண்கள் சீரற்ற முறையில் வழங்கப்பட்டுள்ளன என்பதை இது பிரதிபலிக்கிறது. படித்த இளைஞர்களின் எதிர்காலத்துடன் TRB விளையாடுகிறது' என்று தேர்வு எழுதியவர்களும், தமிழ் நாடு அரசு கலைக் கல்லூரி சிறப்பு விரிவுரையாளர் சங்க நிர்வாகிகளும் கருத்து தெரிவித்துள்ளனர். 'பல வருடக் காத்திருப்புக்குப் பிறகு, வேலை பெறுவதற்காக நாங்கள் இந்தத் தேர்வை எழுதினோம். ஆனால், இந்தத் தன்னிச்சையான மதிப்பீடு எங்கள் எதிர்காலத்தை ஒரு முச்சந்தியில் நிறுத்தியுள்ளது' என்று கட்டுரைத் தாளில் ஒற்றை இலக்க மதிப்பெண் பெற்ற தேர்வர்கள் புகார் கூறியுள்ளனர்.

மதிப்பெண்களுக்கான விளக்கக் கட்டுரை மதிப்பீட்டில் குறைந்த மதிப்பெண் வழங்கியதன் மூலம், TRB நடத்திய உதவிப் பேராசிரியர் தேர்வில் விளக்கக் கட்டுரை மதிப்பீட்டில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விளக்கத் தாளுக்காகப் பயன்படுத்தப்பட்ட மதிப்பீட்டு அளவுகோல்கள், மாதிரி விடைகள் மற்றும் மதிப்பெண் வழங்கும் முறை ஆகியவற்றை TRB பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்றும், வெளிப்படையான மறுமதிப்பீடு நடத்தப்பட வேண்டும் என்றும் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை என்ற குறளை நினைவுபடுத்துவதுடன், தகுதியான தேர்வர்களை நீக்கிவிட்டு, குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்குச் சாதகமாக வெளியிடப்பட்ட தேர்வு முடிவினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இது குறித்து சுதந்திரமான முழு விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவும், விசாரணை முடியும் வரை அனைத்து ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கவும் TVK அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:TRBஉதவி பேராசிரியர் தேர்வுஎடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு அரசுமுறைகேடு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பேரவையில் முதல்வர் டான்ஸ் ஆடுவார்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
Next Article இந்தியாவில் சிகரெட் புகைப்போர் எண்ணிக்கை குறைந்தது – காரணம் என்ன?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தங்க இறக்குமதி குறைந்தது – பிரதமர் மோடி

விநாயகர் சதுர்த்திக்கு களிமண் சிலைகளையே வாங்க வேண்டும் என்றும், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்…

June 28, 2026

முன்னாள் காதலியை கடத்த முயன்ற இளைஞர் காரில் கருகி பலியான சோகம்

கர்நாடகாவில் முன்னாள் காதலியுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற…

June 28, 2026

இந்தியாவில் சிகரெட் புகைப்போர் எண்ணிக்கை குறைந்தது – காரணம் என்ன?

இந்தியாவில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.…

June 28, 2026

மகளிர் இலவச பயணத்தால் தனியார் பஸ் சேவை நிறுத்தம்!

மகளிர் இலவச பஸ் பயணத் திட்டத்தால் தனியார்…

June 28, 2026

கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரிப்பு: 10 பேருக்கு புதிதாக தொற்று

கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நடப்பு…

June 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரபல திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக விளங்கிய பாக்யராஜ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது. சிங்கப்பெண் அதிரடிப்படையினர் பள்ளிக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

1 Min Read
தமிழ்நாடு

கணிதத் தேர்வில் தோல்வி: மனமுடைந்த மாணவி எடுத்த விபரீத முடிவு!

திருப்பூர் அருகே பிளஸ்-2 கணிதத் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

1 Min Read
தமிழ்நாடு

டெல்லி சென்றார் முதல்வர் விஜய்: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பு

தமிழக முதல்வர் விஜய், பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மூன்று நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?