MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சட்டமன்றமா? சர்க்கஸா? – அதிமுக ஐடி விங் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சட்டமன்றமா? சர்க்கஸா? – அதிமுக ஐடி விங் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சட்டமன்றமா? சர்க்கஸா? – அதிமுக ஐடி விங் கேள்வி

தமிழ்நாடு

சட்டமன்றமா? சர்க்கஸா? – அதிமுக ஐடி விங் கேள்வி

Admin
Last updated: ஜூன் 23, 2026 8:11 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாட்டு சட்டப்பேரவைக்கு ஒரு தனி மாண்பு உண்டு. 'வரலாற்று சிறப்புமிக்க பேரவை' எனப் பெருமையுடன் அழைக்கப்படும் அவையில், இந்த கூட்டத் தொடரில் நடந்த சம்பவங்கள் மரபைக் காக்கும் வகையில் இல்லை என அதிமுக விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில், "மேகதாது ஜீவாதாரப் பிரச்சினையில் அலட்சியமாக, விவாதம் ஏதுமின்றி ஒரு இடைச் செருகல் தீர்மானத்தை இந்த பொய்க்கால் குதிரை அரசு நிறைவேற்றியுள்ளது. இது அவையின் செயல் விதிகளை குழிதோண்டிப் புதைக்கும் செயல். அம்மா அவர்களின் முயற்சியால் காவிரி இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. புரட்சித் தமிழர் இபிஎஸ் அவர்களின் முயற்சியால் அமைந்த காவிரி மேலாண்மை ஆணையம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இணையான ஆணையமாக செயல்படும் நிலையில், இன்னொரு ஆணையம் என்பது பல ஆண்டுகால சட்டப் போராட்டத்தின் வெற்றியை நீர்த்துப் போகச் செய்து, கர்நாடக அரசின் சதி வலையில் தமிழ்நாட்டின் உரிமைகளைத் தள்ளும் செயல். விவரம் தெரியாமல், விவசாயிகளின் வலிகள் புரியாமல் இன்றைய அரசு இப்படி ஒரு இடைச் செருகல் தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பது வரலாற்றுத் தவறு" எனத் தெரிவித்தது.

மேலும், "சட்டமன்ற உரைகள் பதிவில் ஏற்றக் கூடியது, வரலாற்றில் நிற்கக் கூடியது. அங்கே Diplomacy, Decency, Decorum தான் ஓங்கி நிற்க வேண்டும். ஆனால், நேற்றைய எதிர்க்கட்சித் தலைவர் உரை மற்றும் இன்றைய முதல்வரின் பதிலுரையில் Disrespectful Slander தான் முன்னே நின்றது. 'சி எம் சார்… இப்போ நீங்க உங்க ஆரஞ்சு கலர் வேன்-ல நின்னு பேசுறதா நினைச்சி, மனப்பாடம் பன்ன ஸ்கிரிப்டை ஒப்பிச்சி, Action பண்ணி காமிங்க' என்று உரையை எழுதிக் கொடுத்தவர் சொல்லிவிட்டார் போல… இன்றைய முதல்வரும் அப்படியே செய்துவிட்டார். அதிலும், எதிர்க்கட்சிகள் எழுப்பிய சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து என்ன விளக்கம் இருந்தது? மின்வெட்டு குறித்து என்ன பதில் இருந்தது? அமோனியா கேஸ் லீக் மரணங்கள் குறித்து என்ன பேசப்பட்டது? ஒன்றுமே இல்லையே..!! பாலியல் வன்கொடுமைக்கு ஆளான எந்த ஒரு சிறுமிக்காகவும் இன்றைய முதல்வரின் மனம் பதறியதாக தெரியவில்லை. அவ்வளவு ஏன், கரூர் மரணங்களையே மிக எளிதாக கடந்து செல்கிறார். அதிலும், கரூர் மரணம் பற்றி பேசும் போது, தன் மீது பழி போடுவது 'வேற லெவல்' என்ற வார்த்தையை சொல்கிறார் என்றால், நாம் எப்போதும் சொல்வோமே, 'Narcissistic Behaviour' , அது இது தான்!" எனக் குறிப்பிட்டுள்ளது.

சட்டப்பேரவையில் உறுப்பினராக அல்லாத ஒரு முன்னாள் முதல்வர் குறித்து, அவரது கட்சியினர் இல்லாத நேரத்தில் பேசுகிறார் என்றால், ஆளுங்கட்சி சபாநாயகர் அனுமதி அளிக்கிறார் என்பதற்காக ஒரு முதல்வர் தன் பொறுப்பின் தன்மை உணராமல் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசும் போது அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல் சில அமைச்சர்கள் பின்னால் ஒளிந்துகொள்ளும் இன்றைய முதல்வர், பனையூர் பங்களாவில் மனப்பாடம் செய்துவிட்டு வந்து கம்பு சுற்றும் போது மட்டும் யாரும் குறுக்கிடக் கூடாதா? அப்படி குறுக்கிட்டால், மனப்பாடம் செய்த டயலாக்கை மறந்துவிடுவாரா? Point of Order என்றால் என்னவென்றே தெரியாத ஒரு கூட்டத்திடம் தமிழ்நாடு சட்டமன்றம் மாட்டிக்கொண்டது தான் வேதனையின் உச்சம். இதில் ஒரு சைகை வேறு… இதற்கு கைதட்ட ஒரு ரசிக வெறிக் கூட்டம்! இது என்ன சட்டமன்றமா? சர்க்கஸ்ஸா? அரசியலை ஏதோ Entertainment Platform போல கருதிக் கொண்டிருக்கும் ரீல்ஸ் முதல்வரே…. மக்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது Content அல்ல… Commitment! மக்கள் பிரச்சனை பற்றி இனியாவது பேசுங்கள்!" என அதிமுக ஐடி விங் பதிவிட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKAssemblyTamil Nadu Governmentஅதிமுகஅரசியல்சட்டமன்றம்தமிழ்நாடு அரசுமேகதாது
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மருத்துவமனையில் ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டம்
Next Article சென்னை – போத்தனூர் இடையே சிறப்பு ரயில் சேவை துவக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் பேசுகிறார்

அமித் ஷா பெயரை கேட்டாலே தீவிரவாதிகள் நடுங்குவர்: கிரண் ரிஜிஜு

மக்களவையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, 'இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின்…

ஆகஸ்ட் 8, 2026

கொண்டைக்கடலையில் பூச்சிமருந்து: தூக்கத்திலேயே இறந்த 2 மகள்கள்

விவசாயி மல்லேஷ் அறுவடை செய்த கொண்டைக்கடலையில் பூச்சிமருந்து…

ஆகஸ்ட் 8, 2026

வேலூர் விமான நிலையம் 6 மாதங்களில் திறப்பு: மத்திய மந்திரி உறுதி

வேலூர் விமான நிலையம் அடுத்த 6 மாதங்களில்…

ஆகஸ்ட் 8, 2026

அமித் ஷாவின் பெயரை கேட்டால் பயங்கரவாதிகளே நடுங்குவர்: கிரண் ரிஜிஜூ

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, 'அமித் ஷாவின்…

ஆகஸ்ட் 8, 2026

உயரமான மின்கம்பத்தில் ஏறி உடற்பயிற்சி செய்த வாலிபர்

சென்னையில், உயரமான மின்கம்பத்தில் ஏறி இளைஞர் ஒருவர்…

ஆகஸ்ட் 7, 2026

You Might Also Like

பிரிட்டன் உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏஞ்சலா ஈகிள் கூட்டாக அறிக்கை வெளியிடுகின்றனர்.
தமிழ்நாடு

ஈரானின் புரட்சிகர படை பயங்கரவாதிகள்: பிரிட்டன் அதிரடி அறிவிப்பு!

ஈரானின் ‘இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை’ (IRGC) பயங்கரவாத அமைப்பாக பிரிட்டன் அறிவித்துள்ளது. லண்டனில் ஐஆர்ஜிசி வகுத்த தாக்குதல் திட்டங்கள் அம்பலம். புதிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை.

2 Min Read
தமிழ்நாடு

கே. பாக்யராஜ் மறைவுக்கு ஆளுநர் இரங்கல்

மூத்த தமிழ்த் திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான கே. பாக்யராஜ் மறைவுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தமிழ் சினிமா உலகிற்கு ஈடுசெய்ய முடியாத…

1 Min Read
தமிழ்நாடு

‘அரசியலில் புதிய பண்பாட்டை துவக்கி வைத்துள்ள முதல்-அமைச்சர் விஜய்க்கு வாழ்த்துகள்’ – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் நேற்று பதவியேற்றார். அவருக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து இன்றைய தினம், தமிழக சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் பதவியே

1 Min Read
தமிழ்நாடு

துணைவேந்தர் நியமனம்: விரைந்து நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல்

பல்கலைக்கழக வேந்தர்களாக முதலமைச்சரை நியமிக்கும் சட்ட முன்வரைவுகளுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில், துணைவேந்தர்களை விரைந்து நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?