அண்ணாமலை மீது திமுக பதிவு செய்திருந்த அவதூறு வழக்கை வாபஸ் பெற்றதற்கான காரணம் என்ன என்று மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 2021-26 காலகட்டத்தில் அண்ணாமலை மீது பியூஷ் மனோஜ் கொடுத்த வழக்கிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
தீவிர ஆர்.எஸ்.எஸ் பிரமுகரான கல்யாணராமன், பெரியார் சிலையை உடைப்பேன் என பேசியதுடன், குண்டர் சட்டத்தில் கைதானார். அண்ணாமலை செய்த ஊழல்கள், மோசடிகள் குறித்து 2 ஆண்டுகளுக்கு முன் ஆதாரங்களுடன் அவர் பதிவு செய்த தகவல்கள் பொதுவெளியில் இன்றும் உள்ளன. ஆனால் இவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும், அண்ணாமலையின் மதவெறி பிரச்சார பயணத்திற்கு எந்த தடையும் இன்றி அனுமதி அளித்ததோடு, அவருக்கு திமுகவின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் உதவியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. திராவிடத்தை இழிவுபடுத்திய மாரிதாஸ், சாட்டை துரைமுருகன் போன்றோரின் வீடியோக்களை திமுக ஐ.டி விங் மூத்தவர்கள் ஆதரிப்பதாகவும், பகிர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆதரவு முற்போக்கு இயக்கங்களுக்கு திமுகவிடமிருந்து கிடைத்ததில்லை என்றும், மே17 இயக்கம் அதிமுக-பாஜக ஆட்சிக்கால வழக்குகளை இன்னும் சுமப்பதாகவும் திருமுருகன் காந்தி தெரிவித்தார். தன் பெயரை ரவுடி பட்டியலில் வைத்திருந்த திமுக, தன் மீது அநீதியான சிறப்பு விசாரணைகளை நடத்தியதாகவும், ஆனால் அண்ணாமலைக்கு முழு பாதுகாப்பும் ஆதரவும் அளிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது ராஜதந்திரம் ஆகாது என்றும், திமுகவின் எதிர்கால தலைவரை வீழ்த்தும் வலிமையை அண்ணாமலைக்கு திமுக ஊட்டி வளர்ப்பதாகவும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டின் சீரழிவு சக்தியான அண்ணாமலையை எதிர்த்து நிற்பது முக்கியம் என்றும், ஆர்.எஸ்.எஸ்ஸின் கள்ளக்குழந்தையை ஆதரிப்பது பாம்புக்கு பால் வார்த்து வளர்ப்பதற்கு ஒப்பானது என்றும் அவர் தெரிவித்தார். திமுக பைல்ஸ், அறிவாலயத்தை செங்கல் செங்கல்லாக பிரிப்பேன் என்ற அண்ணாமலையின் கருத்துக்களை திமுக ஏற்கிறதா என்பதை விளக்க வேண்டும் என்றும் கேட்டார்.
தலித்முரசு மற்றும் காட்டாறு போன்ற அமைப்புகள் ஏன் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றன என்றும், சாதியை ஒழிக்கும் வழியை அண்ணாமலை வாயிலாக நடைமுறைப்படுத்துகிறார்களா என்றும் கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சிக்காலத்தில் மெளனம் காத்த சான்றோர்கள், அண்ணாமலை குறித்து ஏன் வாய்திறக்காமல் மெளனம் காக்கிறார்கள் என்பது புரியவில்லை என்றும் கூறினார்.
மே17 இயக்கம் பெரியாரிய-திராவிட அரசியலுக்கான போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து வருவதாகவும், இனிமேலும் முன்னெடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார். ஆளும்வர்க்கத்தின் தொங்குசதையல்ல பெரியாரியமும், திராவிடமும் என்பதை அறிந்தவர்கள் மே17 இயக்கத்தினர் என்றும் அவர் கூறினார்.
அண்ணாமலை மீதான வழக்குகளை திரும்பப்பெற்று, அவருக்கு சாதகமான நகர்வுகளைச் செய்யும் திமுகவின் முடிவுகளுக்கு மே17 இயக்கத்தின் வன்மையான கண்டனங்கள் என அவர் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.