முதலமைச்சர் ஜோசப் விஜய் அளிக்கும் வாக்குறுதிகளுக்கு மாறாகவே பெண்களின் பாதுகாப்பு நிலை உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். இது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'தவெக ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்பவர், கணவனை இழந்த தனிப்பெண் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் ரீதியாக துன்புறுத்திய செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் முதலமைச்சர் ஜோசப் விஜய் கூறி வரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை. இதுபோன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபட இவர்களுக்கு எங்கிருந்து தைரியம் வருகிறது?' என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமூக விரோத செயல்களுக்கு அரசியல் அடையாளம் ஒரு பாதுகாப்பாக இருக்கக்கூடாது என்பதை முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என்றும், குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.