MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: திருச்செந்தூர் கோயில் கேட்டை திறக்க கோரி அனிதா ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > திருச்செந்தூர் கோயில் கேட்டை திறக்க கோரி அனிதா ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை
தமிழ்நாடு

திருச்செந்தூர் கோயில் கேட்டை திறக்க கோரி அனிதா ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

Admin
Last updated: ஜூன் 29, 2026 7:34 மணி
Admin
Share
SHARE

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சண்முக விலாச மண்டபத்தின் இரும்பு கிரில் கேட்டை உடனடியாக திறக்க வேண்டும் என திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருச்செந்தூர் முருகன் கோயில், முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடாகும். இங்கு திருவிழா காலங்களிலும் விசேஷ நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி, அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

பல நூற்றாண்டுகளாக, தென் மாவட்ட விவசாயிகள் தங்கள் விவசாயம் செழிக்க வேண்டி, விளைபொருட்களை முருகப்பெருமானுக்கு காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். வாழைத்தார், நெல், வெற்றிலை, தேங்காய் போன்றவற்றை சண்முக விலாச மண்டபத்தில் காணிக்கையாக செலுத்தி வழிபடுகின்றனர். மேலும், ஏராளமான திருமணங்களும் இங்கு நடைபெறுகின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சண்முக விலாச மண்டபம் தற்போது இரும்பு கிரில் கேட் போட்டு அடைக்கப்பட்டுள்ளது.

சாமானிய மக்களின் கடவுளான முருகப்பெருமானை விவசாயிகள் காணிக்கை செலுத்துவதற்கும், உள்ளூர் மக்கள் உற்சவரை வழிபடுவதற்கும் காலங்காலமாக இருந்துவந்த வாய்ப்பு இந்த இரும்பு கேட்டால் தடுக்கப்படுகிறது. எனவே, இந்த இரும்பு கேட் உடனடியாக அகற்றப்பட வேண்டும். உள்துறை அருகில் உள்ள கேட்டை பலப்படுத்த வேண்டும். உள்ளூர் மக்கள் வழிபடுவதற்கு நேரம் ஒதுக்கி, அடையாள அட்டை அல்லது ஆதார் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட வேண்டும்.

பக்தர்களின் இந்த கோரிக்கைகளை 15 நாட்களுக்குள் இந்து சமய அறநிலையத்துறையும், திருச்செந்தூர் கோயில் நிர்வாகமும் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், பக்தர்களின் கோரிக்கைக்காக அவர்களுடன் இணைந்து எனது தலைமையில் பெரிய அளவிலான போராட்டம் நடைபெறும்' என அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Templeஅனிதா ராதாகிருஷ்ணன்கோயில்திமுகதிருச்செந்தூர்போராட்டம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article டாடா சியரா EV: சிறப்பம்சங்கள், பவர் – முழு விவரம்
Next Article முதல்வர் விஜய் பதவி விலக சொல்லவில்லை – வைகோ
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நடிகர் மோகன்லால் யானை தந்தங்கள் மற்றும் கலைப்பொருட்களை வனத்துறையிடம் ஒப்படைக்க விண்ணப்பம்

யானை தந்தங்கள், கலைப்பொருட்கள்: வனத்துறையிடம் ஒப்படைக்க மோகன்லாலுக்கு விண்ணப்பம்

கேரளாவில், நடிகர் மோகன்லாலிடம் யானை தந்தங்கள் மற்றும் பழங்கால கலைப்பொருட்களை வனத்துறையினரிடம் ஒப்படைக்குமாறு…

ஜூலை 5, 2026

கர்நாடகாவில் ஆண்களுக்கான தேசிய மனித உரிமைக்குழு: புதிய முயற்சி

கர்நாடகாவில் ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும்…

ஜூலை 5, 2026

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி: இந்தியா ரூ. 38,000 கோடியை தாண்டியது

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2013-14ல் ரூ.…

ஜூலை 4, 2026

ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு ஆடு: அசத்தல் நீச்சல் வீடியோ வைரல்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு…

ஜூலை 4, 2026

இந்தியாவின் கடல்சார் வளர்ச்சி: மத்திய அமைச்சர் சர்பானந்தா பெருமிதம்

இந்தியாவின் முதல் உள்நாட்டு ஏற்றுமதி-இறக்குமதி கப்பல் கொள்கலனை…

ஜூலை 4, 2026

You Might Also Like

தமிழ்நாடு

வெனிசுலா நிலநடுக்கம்: ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ மூலம் இந்தியா உதவிக்கரம்

வெனிசுலா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா 'ஆபரேஷன் அமிஸ்டாட்' மூலம் நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

நீட் வேண்டாம்: தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு – அமைச்சர் அருண்ராஜ்

தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதே தி.மு.க.வின் உறுதியான நிலைப்பாடு என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

1 Min Read
தமிழ்நாடு

கூட்டுறவு பால் உற்பத்தியில் புதிய கண்காணிப்பு அதிகாரி நியமனம்!

தமிழகத்தில் அதிகாரிகள் இடமாற்றம் தொடரும் நிலையில், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

எடப்பாடியின் கனவு தகர்ந்தது: அமைச்சர் செங்கோட்டையன் தாக்கு

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அகந்தையே அதிமுகவின் வீழ்ச்சிக்கு காரணம் என்றும், அவரது கனவு தகர்ந்துவிட்டது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?