MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: 6 மாதங்களில் ஆட்சி கவிழும்: அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > 6 மாதங்களில் ஆட்சி கவிழும்: அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!
தமிழ்நாடு

6 மாதங்களில் ஆட்சி கவிழும்: அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

Admin
Last updated: July 4, 2026 6:14 am
Admin
Share
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது
SHARE

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனது பேச்சில், 'இன்றைக்கு தமிழக மக்கள், 'ஏன்டா ஓட்டுப் போட்டோம், சனியன்கள் மாதிரி வந்து உட்கார்ந்திருக்கிறார்கள்' என்று நினைக்கிறார்கள். அள்ளி அள்ளி தந்தாரே நமக்கு, அந்த புண்ணியவானை அநியாயமாக தோற்கடித்து விட்டோமே' என்று வருந்துவதாகக் குறிப்பிட்டார். மேலும், 'இன்றைக்கு மு.க. ஸ்டாலினை தொகுதியில் அவரை தோற்கடித்தவர்கள் எதற்கும் தகுதி இல்லாதவர்களாக இருக்கிறார்கள்' என்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாகத் தெரிவித்தார். பெருந்தலைவர் காமராஜர் விருதுநகரில் தோற்கடிக்கப்பட்ட போதும், கன்னியாகுமரியில் அப்பச்சி தோற்கடிக்கப்பட்ட போதும் ஏற்பட்ட உணர்வுகளை நினைவு கூர்ந்த அனிதா ராதாகிருஷ்ணன், அதேபோல முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தோற்கடித்தது தவறு என்றும், அவர் ஒவ்வொரு தொகுதியாக பார்த்து மக்களுக்கு நன்மை செய்தவர் என்றும் கூறினார்.

தனது பெயர் ஜோசப் அனிதா ராதாகிருஷ்ணன் என்பதால் தனக்கு ஓட்டு கிடைத்திருக்கும் என்றும், வெறும் அனிதா ராதாகிருஷ்ணன் என்பதால் ஓட்டு கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். விஜய் முட்டிப்போட்டு கொண்டு போனார், அவருக்கு ஓட்டுப் போடுவதா அல்லது எனக்கு ஓட்டுப் போடுவதா என்று மக்கள் நினைத்திருக்கலாம் என்றும், இப்படி தெரிந்திருந்தால் தாங்கள் தலைகீழாகக் கூட முட்டிப்போட்டிருப்போம் என்றும் அவர் வேதனை தெரிவித்தார். தனது தொகுதியில் உள்ள மீனவ சகோதரர்களை உயிராக நேசித்ததாகவும், அவர்களுக்கு இன்னல் வரும்போது தோளோடு தோளாக நின்றதாகவும், ஆனால் அவர்களே தன்னை 'கவுத்து விட்டதாக' அவர் குற்றம் சாட்டினார்.

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அவதூறாகப் பேசுவது, மோதலைத் தூண்டுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தவெக நகரச் செயலாளர் செல்வம் அளித்த புகாரின்பேரில், அமைதியைக் குலைத்தல், மோதலைத் தூண்டுதல் (BNS பிரிவுகள் 352, 353(2)) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தன்னை எந்த நேரத்திலும் கைது செய்ய நேரிடும் என்பதால், தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, 'ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் என்ன பேசுகிறோம் என்பதை தெரிந்து பேச வேண்டும். அதற்காக முதலமைச்சரை அவதூறாக பேசலாமா? எந்த முதலமைச்சர் குறித்தும் அவதூறாக பேசக்கூடாது' என்று கூறி முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு ஆய்வுக்குச் சென்ற அனிதா ராதாகிருஷ்ணனை இன்று (ஜூலை 03) காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அப்போது, திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தவெக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பின்னர், மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சுமார் 5 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டபோது, செய்தியாளர்களிடம் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், 'எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய சொல்லியும் தவெகவில் இணைய வேண்டும் எனவும் காவல் துறையினர் வற்புறுத்தினர். ஆனால் அதற்கு நான் ஒத்துக்கொள்ளவில்லை. திமுகவில் வலுவாக இருப்பேன். எவருக்கும் அடிபணியமாட்டேன்' என்று திட்டவட்டமாக கூறினார். மேலும், 'என்னை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. எங்கள் தலைவர் (மு.க.ஸ்டாலின்) என்ன சொல்கின்றாரோ அதுதான் எங்களுடைய கட்டளை. நாங்கள் திமுகவில் வலுவாக இருப்போம்' என்றும் அவர் தெரிவித்தார்.

'சவால் விட்டு சொல்றேன் 6 மாசத்துக்கு மேல இந்த ஆட்சி இருக்காது, இருக்கவும் விட மாட்டோம்..' என்றும், 'இன்னைக்கு வந்த கட்சிக்கு நாங்க பயப்பட வேண்டுமா? குதிரை அல்ல ஒட்டக பேரம் கூட என்னிடம் நடத்த முடியாது..' என்றும், 'காவல்துறை என்னை தாக்கினால் திருப்பி தாக்குவேன்' என்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசமாகப் பேசினார். அப்போது, 'போலீஸ் அராஜகம் ஒழிக' என்று அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Anitha RadhakrishnanCM VijayDMKTVKஅனிதா ராதாகிருஷ்ணன்ஆத்தூர்தமிழக வெற்றிக் கழகம்திமுகதூத்துக்குடிமுதலமைச்சர்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy1
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை தூத்துக்குடி மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை; ரூ.7.49 லட்சம் பறிமுதல்
Next Article ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் தேர்வு மையம் ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று & நாளை நடைபெறுகிறது.. என்னென்ன கொண்டு வர வேண்டும்?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உத்தர பிரதேசம் சுங்கச்சாவடியில் ஏற்பட்ட தீ விபத்து காட்சி

உ.பி.யில் சுங்கச்சாவடியில் பயங்கர தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தில் சுங்கச்சாவடி மீது கியாஸ் டேங்கர் லாரி மோதி பயங்கர தீ…

July 4, 2026

உத்தரப் பிரதேசத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் உள்ள அரசுப்…

July 4, 2026

பிரதமர் மோடி ராஜஸ்தான் பயணம்: ரூ.1.06 கோடி திட்டங்கள் தொடக்கம்

பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜஸ்தான் பயணம்…

July 4, 2026

7 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை: முக்கிய அறிவிப்பு

இந்தியாவில் செயல்பட்டு வந்த 7 மொபைல் செயலிகளுக்கு…

July 3, 2026

தமிழகத்தில் நேர்மையான ஆட்சி: முதல்-அமைச்சர் விஜயை புகழும் வைகோ

முதல்-அமைச்சர் விஜய் ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை வழங்கி…

July 3, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ஆளுநரின் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காரணம்: உதயநிதி ஸ்டாலின்

மதுரைக்கு சென்றிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தான் ஒரு நியமனப் பதவியில் இருப்பதை மறந்து, மக்கள் பிரதிநிதி போல ஆய்வு நடத்தியுள்ளார். இது அரசியலமைப்புக்கும் மாநில உரிமைக்கும் எதிரானது.…

1 Min Read
தமிழ்நாடு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகையும் தெலுங்கானா முன்னாள் அமைச்சருமான ரோஜா இன்று சாமி தரிசனம் செய்தார். அவர் சிறப்பு அபிஷேகத்திலும் கலந்துகொண்டார்.

1 Min Read
ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் தேர்வு மையம்
தமிழ்நாடு

ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று & நாளை நடைபெறுகிறது.. என்னென்ன கொண்டு வர வேண்டும்?

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வு ஜூலை 4 மற்றும் 5 தேதிகளில் நடைபெறுகிறது. தேர்வு மையங்களுக்கு என்னென்ன கொண்டு வர…

2 Min Read
தமிழ்நாடு

மாணவர்களுக்கு பிஸ்கட் வழங்குவதா? – நயினார் நாகேந்திரன் கேள்வி

தூத்துக்குடி விளாத்திகுளம் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படாத நிலையில் பிஸ்கட் வழங்கப்பட்ட சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக அரசை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?