MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: 126 பந்துகளில் 306 ரன்கள்: அக்சரா குப்தா உலக சாதனை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - விளையாட்டு - 126 பந்துகளில் 306 ரன்கள்: அக்சரா குப்தா உலக சாதனை!

விளையாட்டு

126 பந்துகளில் 306 ரன்கள்: அக்சரா குப்தா உலக சாதனை!

Admin
Last updated: ஜூன் 18, 2026 4:15 மணி
Admin
Share
SHARE

மகளிர் கிரிக்கெட்டில் வரலாறு காணாத வகையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதுக்குட்பட்ட வீராங்கனை அக்சரா குப்தா, வெறும் 126 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 306 ரன்கள் குவித்து பிரம்மாண்ட உலக சாதனை படைத்துள்ளார். பீகார் கிரிக்கெட் சங்கம் நடத்தும் மகளிர் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டம் பாகல்பூரில் உள்ள சாண்டிஸ் காம்பவுண்ட் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் களமிறங்கிய ரக்ஸால் பகுதியைச் சேர்ந்த அக்சரா குப்தா, எதிரணி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். மைதானத்தில் 233 நிமிடங்கள் நிலைத்து நின்று விளையாடிய அவர், 242.86 ஸ்ட்ரைக் ரேட்டில் வெறும் 126 பந்துகளில் 306 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அக்சரா குப்தாவின் இந்த அசாத்திய இன்னிங்ஸில் 55 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் அடங்கும். ஆட்டம் தொடங்கியதில் இருந்தே பவுண்டரிகளாக விளாசிய அவர், வெறும் 16 பந்துகளில் தனது அரைசதத்தையும், 34 பந்துகளில் சதத்தையும் கடந்து மிரட்டினார்.

அக்சரா குப்தாவின் இந்த இமாலய சாதனையைப் பாராட்டிய பீகார் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஹர்ஷ்வர்தன் மற்றும் செயலாளர் ஜியாவுல் அர்பின் ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். பீகார் மாநிலத்தின் கிரிக்கெட் வீராங்கனைகள் தொடர்ந்து மாநிலத்திற்குப் பெருமை சேர்த்து வருவதாகவும், இந்த தொடக்க ஆட்டத்திலேயே இத்தகைய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது பீகார் கிரிக்கெட்டின் பிரகாசமான எதிர்காலத்தைக் காட்டுகிறது என்றும் அவர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு முன்பாக, இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் வரலாற்றில் மும்பையைச் சேர்ந்த ஐரா குப்தா மாநில அளவிலான போட்டியில் 42 பவுண்டரிகள் மற்றும் 16 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 346 ரன்கள் குவித்ததே அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக உள்ளது. தற்போது அவருக்கு அடுத்தபடியாக அக்சரா குப்தா 306 ரன்கள் குவித்து மகளிர் கிரிக்கெட்டில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். கடந்த இரு ஆண்டுகளாக பீகாரில் இருந்து வந்த 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் உலக கிரிக்கெட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. தற்போது மகளிர் கிரிக்கெட்டிலும் அதே போல அக்சரா குப்தா அதிரடியாக 300 ரன்களுக்கு மேல் குவித்து இருக்கிறார். இதை அடுத்து பீகார் கிரிக்கெட் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BiharCricketRecordகிரிக்கெட்சாதனைபீகார்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னையிலிருந்து செங்கோட்டை சிறப்பு ரயில்: அதிராம்பட்டினம், மானாமதுரையிலும் நிற்கும்!
Next Article மேரேஜ் ஸ்டோரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

விளையாட்டு

ஐபிஎல் நிர்வாகி என்னை திட்டினார்.. ஒரு குழந்தை போல் வளர்த்தோம்.. கவாஸ்கர் கருத்து

மும்பை: ஐபிஎல் லீக்கை மேம்படுத்துவதற்காக அணிகளின் தலைவர்களிடம் ஆலோசனை கேட்டதால், ஐபிஎல் நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவரால் தான் ஒருமுறை கண்டித்ததாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்…

2 Min Read
விளையாட்டு

ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்: சகோதரியின் நெகிழ்ச்சிப் பதிவு!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய டி20 கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சாதனை குறித்து அவரது சகோதரி ஷ்ரேஸ்தா நெகிழ்ச்சியுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

2 Min Read
விளையாட்டு

இந்தியா – அயர்லாந்து டி20 தொடர்: இந்திய அணி புறப்பட்டது!

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இந்திய அணி சென்னையிலிருந்து புறப்பட்டது. இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மீது எதிர்பார்ப்பு.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

டி20 கிரிக்கெட்டை காக்க கிரேக் சேப்பலின் 3 முக்கிய யோசனைகள்

டி20 கிரிக்கெட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்ற மூன்று முக்கிய அம்சங்களைச் செயல்படுத்த வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான கிரேக் சேப்பல் வலியுறுத்தியுள்ளார். பந்துவீச்சாளர் விதிகள்,…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?