MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஏடிஎஸ்பி திபு மீது முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க MUJ கோரிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஏடிஎஸ்பி திபு மீது முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க MUJ கோரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஏடிஎஸ்பி திபு மீது முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க MUJ கோரிக்கை

தமிழ்நாடு

ஏடிஎஸ்பி திபு மீது முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க MUJ கோரிக்கை

Fernandez
Last updated: ஜூலை 22, 2026 7:54 காலை
Fernandez
Share
முதல்வர் விஜய் மற்றும் பத்திரிகையாளர் சங்க பிரதிநிதிகள்
முதல்வர் விஜய் மற்றும் பத்திரிகையாளர் சங்க பிரதிநிதிகள் குறித்த செய்தி
SHARE

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டபோது, அவரிடம் பேட்டி எடுக்க முயன்ற பத்திரிகையாளர்களை ஏடிஎஸ்பி திபு மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாக்கை துருத்தியும், கைகளை ஓங்கியும் மிரட்டும் தொனியில் பேசிய ஏடிஎஸ்பி திபுவின் நாகரிகமற்ற செயலுக்கு பத்திரிகையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சக காவல் அதிகாரிகள் அவரைத் தடுக்க முயன்றபோதும், அவர் தொடர்ந்து வரம்புமீறி நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ) வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஒரு மூத்த காவல் அதிகாரியின் இத்தகைய செயல்பாடு சட்டத்தின் ஆட்சிக்கும், ஜனநாயக நெறிமுறைகளுக்கும், பத்திரிகை சுதந்திரத்திற்கும் எதிரான அப்பட்டமான அத்து மீறலாகும். அவரது நடவடிக்கைக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது' என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், முந்தைய சட்டமன்றத் தேர்தல் வேட்புமனுத் தாக்கலின் போது, தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்தும், இதே போல் ஏடிஎஸ்பி திபு, பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதும் தெரிய வந்துள்ளது. ஏ.டி.எஸ்.பி., திபுவின் நடவடிக்கைகள் தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு எதிராக இருப்பதாக பத்திரிகையாளர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

செய்தி சேகரிப்பதும், பொதுநலன் சார்ந்த நிகழ்வுகளில் தொடர்புடையவர்களிடம் கருத்து கேட்பதும் பத்திரிகையாளர்களின் அடிப்படை தொழில்முறை உரிமையும் கடமையும் ஆகும். அந்தக் கடமையை மிரட்டல், அச்சுறுத்தல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் மூலம் தடுக்க முயல்வது, இந்திய அரசியலமைப்பு உறுதி செய்துள்ள பத்திரிகைச் சுதந்திரத்தின் மீது நடத்தப்படும் நேரடித் தாக்குதலாகும் என்று சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏடிஎஸ்பி திபு நடந்துகொண்ட விதம் பத்திரிகையாளர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இந்த, அராஜகமான மற்றும் ஜனநாயக விரோதச் செயலை சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ) வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே, மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திபுவை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து, அவர் மீது உரிய சட்ட மற்றும் துறைரீதியான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்துகிறது.

ஜனநாயகத்தின் முக்கியத் தூண்களில் ஒன்றான பத்திரிக்கைத் துறையின் அடிப்படை உரிமைகள் மீது தொடரும் இதுபோன்ற அடக்குமுறைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் சங்கம் கோரியுள்ளது. இந்தச் சம்பவம், பத்திரிகை சுதந்திரம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்த தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:MUJஅதிகார துஷ்பிரயோகம்ஏடிஎஸ்பி திபுசென்னை பத்திரிகையாளர் சங்கம்தூத்துக்குடிபத்திரிகை சுதந்திரம்முதல்வர் விஜய்விளாத்திகுளம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்யும் காட்சி ரோஹித் சொன்னதை நம்பவில்லை: சஞ்சு சாம்சன் மனம் திறந்த உண்மை
Next Article பகவத் கீதை மற்றும் பௌத்த தத்துவத்தின் தாக்கத்துடன் அமெரிக்காவில் பிரபலமடைந்த நாவல் குறித்த செய்தி பகவத் கீதை, பௌத்த தத்துவத்தால் அமெரிக்காவில் கலக்கிய நாவல்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி

அசாமில் கனமழை: ஒரே நாளில் 21 பேர் உயிரிழப்பு – அதிர்ச்சி தகவல்

வடகிழக்கு மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அசாம் மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை…

ஜூலை 22, 2026

ஞானவாபி, மதுரா மசூதி வழக்கு: உச்ச நீதிமன்ற பரிந்துரையை நிராகரித்த முஸ்லிம்கள்

வாராணசி, மதுரா, சம்பல் மசூதிகள் தொடர்பான வழக்குகளில்…

ஜூலை 22, 2026

சிக்கிமில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து: 10 பேர் உயிரிழப்பு

சிக்கிம் மாநிலம் சாமர்டங் பகுதியில் 'டீஸ்டா ஸ்டேஜ்…

ஜூலை 22, 2026

நீண்ட கொம்புகளுடன் காளையுடன் திருப்பதிக்கு பக்தர் நடைபயணம்

முன்னோர்களின் பாரம்பரியத்தை பின்பற்றி, நீண்ட கொம்புகளுடன் கூடிய…

ஜூலை 22, 2026

டெல்லியில் ஜாலியன் வாலாபாக் போன்ற கொடூர தாக்குதல் – சிஜேபி குற்றச்சாட்டு

நாடாளுமன்ற பேரணியின் போது டெல்லியில் ஜாலியன் வாலாபாக்…

ஜூலை 22, 2026

You Might Also Like

மாநகர போக்குவரத்து கழக பேருந்து
தமிழ்நாடு

சென்னையில் மகளிர் சிறப்பு பேருந்துகள் நிறுத்தம்: வதந்தி என MTC விளக்கம்

சென்னையில் 100 மகளிர் சிறப்புப் பேருந்துகள் நிறுத்தப்படுவதாக பரவும் தகவல் வதந்தி என மாநகர போக்குவரத்து கழகம் (MTC) விளக்கம் அளித்துள்ளது. 1,724 பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும்…

1 Min Read
தமிழ்நாடு

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்பு

தமிழ்நாட்டில் கோடை காலம் வாட்டி வதைத்து வந்த சூழலில், தற்போது மழைக்கான சூழல் உருவாகி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த மழையால் வெப்பம் குறைந்து சீதோஷ்ண…

1 Min Read
வரி பாக்கியை செலுத்தக் கோரி பொதுமக்களின் காலில் விழும் ஊராட்சி செயலாளர்
தமிழ்நாடு

சேலம்: வரி கட்ட மக்கள் காலில் விழுந்த ஊராட்சி செயலாளர்!

சேலம் மாவட்டம் சாணாரப்பட்டி ஊராட்சியில், வரி பாக்கி வைத்திருந்த பொதுமக்களிடம் ஊராட்சி செயலாளர் மாதவன் காலில் விழுந்து வேண்டுகோள் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராம வளர்ச்சிக்காக…

2 Min Read
தமிழ்நாடு

மாணவர்களுக்கு சாதி விவரத்துடன் அடையாள அட்டை: அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளி மாணவர்களுக்கு சாதி விவரத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது 10 மற்றும் 12 ஆம் வகுப்பு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?