MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அதிமுகவை அழிவில் நிறுத்திய எடப்பாடி பழனிசாமியின் முடிவு – விஜயபாஸ்கர்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அதிமுகவை அழிவில் நிறுத்திய எடப்பாடி பழனிசாமியின் முடிவு – விஜயபாஸ்கர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அதிமுகவை அழிவில் நிறுத்திய எடப்பாடி பழனிசாமியின் முடிவு – விஜயபாஸ்கர்

தமிழ்நாடு

அதிமுகவை அழிவில் நிறுத்திய எடப்பாடி பழனிசாமியின் முடிவு – விஜயபாஸ்கர்

Admin
Last updated: ஜூன் 30, 2026 3:13 மணி
Admin
Share
SHARE

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் அரசியல் பயணத்தைத் தொடங்கியவன் நான். பதவிக்காகவோ, சுயநலத்திற்காகவோ இந்த இயக்கத்திற்குள் வரவில்லை. இரத்தமும் சதையுமாக இந்த இயக்கத்தை என் மூச்சாகக் கருதி வாழ்ந்தவன். அம்மா அவர்களின் மறைவுக்குப் பின், இயக்கம் சந்தித்த சோதனைகள் அத்தனையும் நீங்கள் அறிவீர்கள். அத்தனை நெருக்கடி நேரங்களிலும், ஒற்றைத் தலைமையாக அண்ணன் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் பின்னால் உறுதியாக நின்றவன் இந்த விஜயபாஸ்கர்.

கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில், கரூரில் நாம் சந்தித்தது அரசியல் மட்டுமல்ல, அப்பட்டமான அதிகார அடக்குமுறையும், நம் தொண்டர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்ட துயரங்களும் தான். அதன் விளைவாக என் மீது 43 பொய் வழக்குகள் சுமத்தப்பட்டன. என் இரத்தத்தின் இரத்தமான கழக உடன்பிறப்புகள் மற்றும் என் குடும்பத்தினர் மீது 100-க்கும் மேற்பட்ட கொடூரமான வழக்குகள் பாய்ந்தன. என் கழக உடன்பிறப்புகள் வாழ்வு சிதைக்கப்பட்டது. என் குடும்பத்தின் நிம்மதி குலைக்கப்பட்டது. அத்தனை அராஜகங்களையும் தூள்தூளாக்கி, செந்தில் பாலாஜியின் அதிகார மமதையை வீழ்த்தி, அதிகார பலத்தோடும் பண பலத்தோடும், கீழ்மட்ட அரசியலின் உச்சகட்டமாக விளங்கிய செந்தில் பாலாஜியை எதிர்த்து பல்வேறு சட்டப் போராட்டம் நடத்தி, எத்தனையோ துரோகங்களைத் தாங்கி, நெஞ்சுயர்த்தி கரூரில் மீண்டும் அதிமுக கொடியை ஏற்றியவன் நானும் என்னுடன் துணை நின்ற கழக உடன்பிறப்புகளும் என்பது நாடறியும்.

ஆனால், இத்தனை தியாகங்களுக்கும், நான் சுமந்த வேதனைகளுக்கும் இன்று எனக்குப் பரிசாகக் கிடைத்திருப்பது நெஞ்சில் பாய்ந்த துரோக ஈட்டி மட்டுமே. இத்தனை ஆண்டுகள் நாம் யாரை எதிர்த்து, யாருடைய மக்கள் விரோத, அராஜக ஆட்சியை வீழ்த்த இத்தனை வழக்குகளையும் ரணங்களையும் நம் உடம்பில் ஏந்தினோமோ, இன்று அதே தீய சக்திகளுடன் கைகோர்த்து, அவர்கள் தயவோடு ஆட்சிக் கட்டிலில் அமர தலைமை முற்பட்டதைக் கண்டு என் மனம் ரத்தக் கண்ணீர் வடிக்கிறது. புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவி அம்மாவும் ஈன்றெடுத்த அரசியல் வாரிசுகள் நாம், நமக்குப் போய் இப்படியொரு எண்ணம் வரலாமா? தீய சக்தி என்று அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட திமுக-வுடன், இந்த அண்ணா திமுக எப்படி கைகோர்க்க முடியும்?

அண்ணன் எடப்பாடியார் அவர்களே, நீங்கள் முன்மொழிந்த அந்தச் சமரச முடிவுக்குத்தான் எங்களைப் போன்ற நிர்வாகிகளும் தொண்டர்களும் எதிராக நின்றோமே தவிர, உங்களின் தலைமைக்கு ஒருபோதும் நாங்கள் எதிராக நின்றதில்லை. உங்களைத்தான் இந்த இயக்கத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளராக நாங்களெல்லாம் உயிரைக் கொடுத்து முன்னிறுத்தினோம். ஆனால், எங்களின் அத்தனை எதிர்ப்புகளையும், தொண்டர்களின் தார்மீக உணர்வுகளையும் துச்சமாக மதித்து, நீங்கள் எடுத்த அந்தத் தன்னிச்சையான முடிவுதான் இன்று ஒட்டுமொத்த இயக்கத்தையும் அழிவிலும் வேதனையிலும் நிறுத்தியுள்ளது. உங்களின் இந்த சந்தர்ப்பவாத நிலைப்பாட்டிற்குப் பலியாக, எத்தனையோ ரணங்களைச் சுமந்த இந்த விஜயபாஸ்கரும் என்னுடன் பயணித்த கழக தோழர்களும் தயாராக இல்லை. என் உடன்பிறவா கழகத் தொண்டர்களே, இந்த இயக்கத்திற்காக என் உழைப்பையும், என் வாழ்நாளின் பெரும் பகுதியையும் கொடுத்துவிட்டேன். இன்று, இந்த இயக்கத்திலிருந்து மீளா கண்ணீருடனும் மிகுந்த மன வேதனையுடனும் விடைபெறுகிறேன். என் உயிரினும் மேலான கரூர் தொகுதி பொதுமக்களே உங்களின் சேவகனாக என் மக்கள் பயணம் என்றும் தொடரும். நன்றி… வணக்கம்..! எனக் குறிப்பிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKஅதிமுகஅரசியல்எடப்பாடி பழனிசாமிஎம்.ஆர்.விஜயபாஸ்கர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article துணை பொதுச்செயலாளர் பதவி ஏற்க மறுப்பு: வேலுமணி அறிவிப்பு
Next Article போலியோ சொட்டு மருந்து ரீல்ஸ்: த.வெ.க. ஒன்றிய செயலாளர் தற்காலிக நீக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையாற்றுகிறார்

இலவச பயிற்சி: தேர்வுகளுக்கு ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ பயிற்சி – மோடி அறிவிப்பு

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி, பல்வேறு தேர்வுகளுக்கு இலவச இணையவழிப் பயிற்சி…

ஆகஸ்ட் 15, 2026

பிரதமர் மோடி அனைத்திற்கும் உரிமை கோருகிறார்: கார்கே குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின…

ஆகஸ்ட் 15, 2026

ஜனநாயகத்தில் விவாதங்கள், போராட்டங்கள் அவசியம் – மோகன் பகவத்

ஜனநாயகத்தில் விவாதங்கள், உரையாடல்கள், எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்கள்…

ஆகஸ்ட் 15, 2026

தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி: 2 பேர் கைது

பிரபல தங்க வர்த்தகரின் விவரங்களை திருடி, ஹைதராபாத்…

ஆகஸ்ட் 15, 2026

பெரிய கனவுகள் காணுங்கள்: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி

80வது சுதந்திர தின உரையில் பேசிய பிரதமர்…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கும்பக்கரை அருவி: சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க அனுமதி!

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரானதை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

நீட் வேண்டாம்: திருமாவளவன் தலைமையில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைக் கண்டித்தும், தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வலியுறுத்தியும், நாளை தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள்…

1 Min Read
மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவிக்கிறார்
தமிழ்நாடு

மாணவர் போராட்டங்கள்: மோடி அரசின் சர்வாதிகார முகம் அம்பலம் – மாணிக்கம் தாகூர்

மாணவர் போராட்டங்கள் மூலம் மோடி அரசின் சர்வாதிகார முகம் அம்பலமாகியுள்ளது. அரசு அதிகாரமும் கல்வி அமைப்பும் மக்களுக்கே சொந்தம் என மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

2 Min Read
தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமார்
தமிழ்நாடு

தமிழக தலைமைச் செயலாளர் பதவிக்காலம் நீட்டிப்பு: சாய்குமாருக்கு பிப். 28 வரை வாய்ப்பு

தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமார் அவர்களின் பதவிக்காலம் மத்திய அரசின் ஒப்புதலுடன் பிப்ரவரி 28 வரை 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது நிர்வாகத்தில் தொடர்ச்சியை உறுதி செய்கிறது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?