MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: திமுகவுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கடும் எச்சரிக்கை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திமுகவுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கடும் எச்சரிக்கை!

தமிழ்நாடு

திமுகவுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கடும் எச்சரிக்கை!

Admin
Last updated: ஜூன் 26, 2026 7:05 காலை
Admin
Share
SHARE

முதலமைச்சர் விஜயைப் பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நான்கு நாட்களாக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகளை திருமாவளவன் பார்க்க வேண்டும். முதலமைச்சர் விஜயைப் பற்றி என்ன மாதிரியான அவதூறு சொற்கள் சொன்னார்கள் என்பதை பாருங்கள். அதற்கு முதலமைச்சர் எதிர்வினையாற்றினார். கொளத்தூர் ஒன்றும் தமிழ்நாட்டில் இல்லாத வார்த்தை கிடையாது. ஏன் அதைப் பற்றி சட்டசபையில் பேசக்கூடாதா? நாங்கள் யாரையும் கிண்டல் செய்யவில்லை. ஆனால் எங்கள் மீது விமர்சனம், தாக்குதல் நடத்தும்போது அரசியல் ரீதியாக தனிப்பட்ட பதில் சொல்ல வேண்டிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம். எங்களை அடித்துக்கொண்டே இருப்பார்கள். நாங்கள் அமைதியாகப் போக வேண்டுமென்ற பண்ணையார்த்தன அரசியலுக்குள் நாங்கள் இருக்க மாட்டோம். மரபுப்படி நாங்கள் நடந்து வருகிறோம். திமுக முன்வைக்கும் போலி பிரச்சாரங்களுக்கு நாங்கள் பதில் சொல்வோம். அப்படித்தான் முதலமைச்சர் விஜயும் பதில் சொன்னார். அப்போது திமுகவினர் அமைதியாக எழுந்து சென்று விட்டனர். கட்சி நிதி என்ற வார்த்தை மட்டும் தான் சொன்னார். அவர் எந்த கட்சியையும் குறிப்பிடவில்லை.

கடந்த திமுக ஆட்சியில் துறை ரீதியாக திட்டம் கொண்டு வருவதுபோல ஊழலுக்கு திட்டம் போட்டுள்ளார்கள். இந்த துறைக்கு இவ்வளவு சதவிகிதம் ஊழல் செய்ய வேண்டும் என்று இருந்தது. தவெக ஆட்சியில் அதனையெல்லாம் ஒழிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பொதுமக்களுக்கும் தெரியும். இதனை சட்டரீதியாக நிரூபிப்பார்கள். ஆனால் மக்கள் மன்றத்தில் போன அரசு எப்படி இருந்துச்சு, என்னோட அரசு எப்படி இருக்கும் என நேரலையில் தான் தெரிவித்தார். மக்கள் பணத்தை தொட மாட்டோம் என்ற துணிச்சல் விஜய்க்கு இருக்கிறது.

திமுகவினர் எழுந்து குரல் கொடுத்தபோது சபாநாயகர் வரலாற்றில் இல்லாத அளவுக்கு எதிர்க்கட்சிக்கு பேச வாய்ப்பளிப்பதாக சொன்னார். ஆனால் திமுக அதைப் பற்றி பேச நேர்மையும், துணிச்சலும் உதயநிதி ஸ்டாலினுக்கு இல்லை. அதை சட்டப்பேரவையில் அவர் பேசியிருக்கலாம். 32 துறைகளில் தலா 16 துறைகள் சபரீசனுக்கும், உதயநிதிக்கும் பிரித்து கொடுக்கப்பட்டிருந்தது. தவெக ஆட்சியில் மாற்றங்கள் வந்திருக்கிறது. தனிப்பட்ட தாக்குதல்களை தேர்தலில் திமுக காட்டியதால் தான் தோற்றது. நாங்கள் மக்களுக்கான அரசியலை செய்கிறோம்" என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்ஆதவ் அர்ஜூனாசட்டமன்றம்திமுகமு.க. ஸ்டாலின்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐ.சி.எப். தொழிற்சாலை: நடப்பு நிதியாண்டில் 4,500 ரெயில் பெட்டிகள் தயாரிப்பு இலக்கு
Next Article காணாமல் போன கட்சிக்கு 10 சீட், கிளை இல்லாத கட்சிக்கு 8 சீட்… எங்களுக்கு? – வைகோ ஆவேசம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியையொட்டி நடைபெற்ற கிரிவலத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சிறப்பு ஏற்பாடுகளுடன் ஆன்மீக நிகழ்வு கோலாகலமாக நடந்தது.

1 Min Read
தமிழ்நாடு

வணிக சிலிண்டர் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்துள்ளன. இந்த விலை குறைப்பு நுகர்வோருக்கு ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.

1 Min Read

தூத்துக்குடியில் 1.25 லட்சம் மாடுகளுக்கு தடுப்பூசி பணி நாளை தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் 1.25 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. கால்நடைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதே இதன் நோக்கம்.

1 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடியில் 1,100 கிலோ ரேஷன் அரிசி ஆம்னி வேனில் கடத்தல்: ஒருவர் கைது

தூத்துக்குடியில் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி ஆம்னி வேனில் கடத்தப்பட்ட நிலையில், 1,100 கிலோ அரிசி மற்றும் வேனை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?