பிரபல நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியிடம் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில், பாடகி கெனிஷாவுடன் அவர் பழகுவதாக எழுந்த சர்ச்சை, ரவி மோகனின் மனைவி ஆர்த்தியை கொந்தளிக்கச் செய்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, பாடகி கெனிஷா தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், சென்னையை விட்டு செல்வதாகவும் பதிவிட்டிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரவி மோகன், கண்ணீருடன் தனது நிலையை விளக்கினார்.
"எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை சினிமாவில் நடிக்கப் போவதில்லை. என் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த அவமானங்களைத் தாங்க முடியவில்லை. எனது தனிப்பட்ட வாழ்க்கை சீரடைந்ததும், இந்த 'சைபர் புல்லிங்' பிரச்சனைகள் நின்றதும் கண்டிப்பாக மீண்டும் நடிப்பேன். இது கடவுளின் கையில் உள்ளது. 23 வருடங்களாக நடித்து வருகிறேன், எனது 95 சதவீத படங்கள் வெற்றி பெற்றுள்ளன. என் குடும்பம்தான் எனக்கு எல்லாம். அவர்களை யாராவது சீண்ட நினைத்தால் நான் சும்மா இருக்க மாட்டேன். இத்தனை நாள் பேசாமல் இருந்தது என் தவறு. என் குழந்தைகளைப் பார்க்க விடாமல், பாதுகாவலர்களுடன் பள்ளிக்கு அனுப்புகிறார்கள்," என கண்ணீர் மல்க கூறினார்.
"அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்றுதான் ஓடி வந்தேன். என்னை ரத்தம் வரும் அளவுக்கு சுரண்டினார்கள். வீட்டை விட்டு எதுவும் இல்லாமல் வெளியே வந்தேன். இப்போது வாடகை வீட்டில் இருக்கிறேன். நண்பர்கள்தான் என்னைக் காப்பாற்றினார்கள். கோடிக்கணக்கில் நான் கட்டிய வீட்டில் அவர்கள் சுகமாக இருக்கிறார்கள். என்னைக் கிண்டல் கேலி செய்யாதீர்கள். முதலில் நான் ஒரு மனிதன். கஷ்டம் வரும்போது உடன் நின்றவர் கெனிஷா. என் 45 வயதுக்கு பிறகு அழகின் பின்னால் ஓடுவதாக சொல்கிறார்கள். என் வேலையே அழகான பெண்களுடன் நடிப்பதுதான். அவர்களுக்கு ஏதாவது காரணம் தேவை, அதற்காக எதையாவது சொல்கிறார்கள். சைபர் புல்லிங் மூலம் கெனிஷாவை காலி பண்ண அனுப்பிவிட்டார்கள். 23 வருட திரையுலகில் எந்த 'பிளாக்மார்க்'கும் இல்லாமல் இருந்தேன்," என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.
"அவர்களுக்கு நான் உயிரோடு இருக்கக் கூடாது. என் குழந்தைகளைப் பார்க்க விடாததால் என் கைகளை வெட்டிக்கொண்டேன். இதுதான் இனி நடக்கும். அதுதான் அவர்களுக்கும் வேண்டும்," என்று கூறிய ரவி மோகன் தொடர்ந்து பேச முடியாமல் உடைந்து அழுதார். பின்னர், "என்னை பற்றி பேச இட்லி நடிகைக்கு தகுதி இல்லை. 3 பேரின் வாழ்க்கையை அழிக்க முயன்ற அந்த நடிகை, என்னைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? இனி பேசினால் நான் சும்மா விட மாட்டேன்," என்றும் அவர் கடுமையாக சாடினார்.