MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ரவி மோகனின் குற்றச்சாட்டுகள் பொய்: ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார் பதில்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > சினிமா > ரவி மோகனின் குற்றச்சாட்டுகள் பொய்: ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார் பதில்
சினிமா

ரவி மோகனின் குற்றச்சாட்டுகள் பொய்: ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார் பதில்

Admin
Last updated: May 16, 2026 8:59 pm
Admin
Share
SHARE

நடிகர் ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரபல பாடகி கெனிஷாவுடன் நடிகர் ரவி மோகன் ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து பல விழாக்களில் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர். இதுகுறித்து ரவி மோகனின் மனைவி ஆர்த்தி தனது கண்டனத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனிடையே, பாடகி கெனிஷா தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், சென்னையை விட்டு செல்வதாகவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை ஜெயம் ரவியின் மனைவி மற்றும் தாயார், ஒரு நடிகை மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

சுஜாதா விஜயகுமார் தனது விளக்கத்தில், 'ஆர்த்தி தன்னை மிரட்டி திருமணம் செய்துகொண்டதாக ரவி மோகன் கூறுவது முற்றிலும் பொய். யார் யாரை மிரட்டி திருமணம் செய்துகொண்டார்கள் என்பது விரைவில் வெளிவரும். ஒரு பெண்ணுக்கு அநீதி இழைக்கப்பட்டால், மற்ற பெண்கள் நிச்சயம் குரல் கொடுப்பார்கள். எனது மருமகன் ரவி மோகன் மீது எனக்கு இன்னும் மரியாதை உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், 'ஒன்றரை வருடங்களாக நீதிமன்றத்தில் இருக்கும் ஒரு விஷயத்தை இப்போது ரவி மோகன் பேசியுள்ளார். நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் தவறு செய்யாததால் அழவோ, உணர்ச்சிவசப்படவோ மாட்டேன். ரவியின் பேச்சால் குழந்தைகளுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளை பார்க்க அனுமதிக்கவில்லை என்பதும் பொய். என் மீதான அவதூறுகளுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்பேன். திருமணத்திற்குப் பிறகு ஒரே வங்கி கணக்கை வைத்திருப்பது தவறில்லை. வழக்கு நிலுவையில் இருப்பதால் இதுவரை இதுகுறித்து நான் பேசவில்லை. அனைத்து பெற்றோரும் குழந்தைகளுக்காகவே வாழ்கிறார்கள்' என்றும் சுஜாதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Newsஆர்த்திகுடும்ப நல நீதிமன்றம்சுஜாதா விஜயகுமார்பாடகி கெனிஷாரவி மோகன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பிரதமர் மோடி: இந்தியாவின் லட்சியங்கள் எல்லைகளைத் தாண்டும்!
Next Article விஜய் ஆட்சி மக்களுக்கு நன்மை செய்தால் மார்க்சிஸ்ட் ஆதரவு – பெ.சண்முகம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மகனைக் கண்டுகொலை: கள்ளத்தொடர்பு விவகாரத்தில் மனைவியைக் கைது செய்தது போலீஸ்

சென்னையில், மகன் கண் முன்னே கணவரை மனைவியே குத்திக் கொலை செய்த சம்பவம்…

July 1, 2026

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் பயங்கரம்: லாரி மீது மோதி தீப்பிடித்த பேருந்து – 8 பேர் உயிரிழப்பு

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் லாரி மீது மோதி தீப்பிடித்த…

July 1, 2026

பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்: இன்று முதல் அமல்

மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும்…

July 1, 2026

மும்பையில் பள்ளி பேருந்து மீது மரம் விழுந்து மாணவர் பலி

மும்பை செம்பூர் பகுதியில் பள்ளி பேருந்து மீது…

June 30, 2026

கணவனை விட அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் கிடையாது – கர்நாடக உயர்நீதிமன்றம்

கணவரை விட அதிகமாக சம்பாதிக்கும் பெண்கள் ஜீவனாம்சம்…

June 30, 2026

You Might Also Like

சினிமா

சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ முதல் பாடல் புரோமோ நாளை வெளியீடு

நடிகர் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தின் முதல் பாடல் புரோமோ நாளை வெளியாகும். வெங்கி அட்லூரி இயக்கிய இந்தப் படம் ஆகஸ்ட் 14 அன்று திரைக்கு…

1 Min Read
சினிமா

சட்டசபையில் விஜய்யை கிழி கிழி என கிழிக்கிறார் உதயநிதி – சத்யராஜ்

நடிகர் சத்யராஜ், விஜய் மக்கள் மன்றத்தில் நடக்கும் கூட்டங்களில் விஜய் தேவையில்லாமல் ஆக்ரோஷமாகப் பேசுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். சட்டசபையில் பேச வேண்டிய விஷயங்களை அங்கு பேச வேண்டும்…

1 Min Read
சினிமா

இளையராஜாவின் இசையில் மாரி செல்வராஜின் ‘வாழை 2’?

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'வாழை' படத்தின் இரண்டாம் பாகத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
சினிமா

‘பெத்தி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை!

‘பெத்தி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் புதிய வசூல் சாதனையை படைத்துள்ளது. படத்தின் வெற்றி பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?