நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு தி ஹேக் நகரில் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் நடைபெற்ற நடனம், இசை நிகழ்ச்சிகளையும் அவர் கண்டு ரசித்தார்.
இந்தியாவில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்ட பிரதமர், நெதர்லாந்தில் இந்திய வம்சாவளியினர் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்து வருவதாகப் பாராட்டினார். 'உங்கள் பங்களிப்பால் ஒவ்வொரு இந்தியரும் பெருமையடைகிறார்' என்று அவர் கூறினார்.
இந்தியா தற்போது பெரும் கனவுகளைக் கண்டு வருவதாகவும், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் குறைக்கடத்தி (semiconductor) துறைகளில் இந்திய இளைஞர்கள் ஆர்வத்துடன் முன்னேறி வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
உலகளவில், இந்தியா 3வது பெரிய ஸ்டார்ட்-அப் சூழலியலைக் கொண்ட நாடாக உருவெடுத்துள்ளது என்றும், உலகின் மிகப்பெரிய அரசு நிதியுதவி சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது என்றும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.