MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: மகளிர் டி20: அதிவேக அரைசதம் அடித்து உலக சாதனை படைத்த பாத்திமா சனா!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > விளையாட்டு > மகளிர் டி20: அதிவேக அரைசதம் அடித்து உலக சாதனை படைத்த பாத்திமா சனா!
விளையாட்டு

மகளிர் டி20: அதிவேக அரைசதம் அடித்து உலக சாதனை படைத்த பாத்திமா சனா!

Admin
Last updated: May 16, 2026 11:29 am
Admin
Share
SHARE

கராச்சியில் நடைபெற்ற பாகிஸ்தான் – ஜிம்பாப்வே மகளிர் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில், பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா அதிரடியாக விளையாடி உலக சாதனை படைத்துள்ளார். முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 152 ரன்கள் எடுத்திருந்தபோது களமிறங்கிய பாத்திமா சனா, எதிரணி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து தனது இன்னிங்ஸை தொடங்கினார்.

நொம்வெலோ சிபாண்டா வீசிய 19-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் உட்பட 24 ரன்களை விளாசிய பாத்திமா சனா, வெறும் 14 பந்துகளில் 48 ரன்களை எட்டினார். தொடர்ந்து, கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் 2 ரன்கள் எடுத்ததன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிக வேகமான அரைசதத்தை வெறும் 15 பந்துகளில் பதிவு செய்தார். இதற்கு முன் சோபி டிவைன், போப் லிட்ச்பீல்ட் மற்றும் இந்தியாவின் ரிச்சா கோஷ் ஆகியோர் 18 பந்துகளில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது. பாத்திமா சனா அதனை முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

மேலும், பாத்திமா சனா 19 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில் சாய்ரா ஜபீன் 50 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது. இது சர்வதேச டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

224 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, பாகிஸ்தானின் சாடியா இக்பால் மற்றும் நஷ்ரா சந்துவின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 90 ரன்களுக்கு சுருண்டது. பந்துவீச்சிலும் தனது திறமையை வெளிப்படுத்திய கேப்டன் பாத்திமா சனா 1 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CricketPakistanWomen's Cricketகிரிக்கெட்பாகிஸ்தான்மகளிர் கிரிக்கெட்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரசிகருடன் மோதல்: அர்ஷ்தீப் சிங்கிற்கு சிக்கல்?
Next Article இந்தியாவிற்கு 3 கோடி பேரல் கச்சா எண்ணெய்: ஐக்கிய அரபு அமீரகத்துடன் ஒப்பந்தம்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் பயங்கரம்: லாரி மீது மோதி தீப்பிடித்த பேருந்து – 8 பேர் உயிரிழப்பு

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் லாரி மீது மோதி தீப்பிடித்த பேருந்து விபத்தில் 8 பேர்…

July 1, 2026

பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்: இன்று முதல் அமல்

மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும்…

July 1, 2026

மும்பையில் பள்ளி பேருந்து மீது மரம் விழுந்து மாணவர் பலி

மும்பை செம்பூர் பகுதியில் பள்ளி பேருந்து மீது…

June 30, 2026

கணவனை விட அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் கிடையாது – கர்நாடக உயர்நீதிமன்றம்

கணவரை விட அதிகமாக சம்பாதிக்கும் பெண்கள் ஜீவனாம்சம்…

June 30, 2026

நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்: ஆதார் அப்டேட் முதல் ரயில் அபராதம் வரை

நாளை முதல் ஆதார் மின்னஞ்சல் முகவரி இலவச…

June 30, 2026

You Might Also Like

உலகம்

பாகிஸ்தான் குவெட்டாவில் குண்டுவெடிப்பு: 24 பேர் பலி

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் ராணுவ வீரர்கள் பயணித்த ரயில் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 24 பேர் உயிரிழந்தனர். பலூச் விடுதலைப் படை இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

இந்திய அணியில் தோனிக்கு புதிய பொறுப்பு? பிசிசிஐ திட்டம்!

இந்திய கிரிக்கெட் அணியில் எம்.எஸ். தோனிக்கு புதிய பொறுப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிசிசிஐ-யின் இந்த திட்டம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
விளையாட்டு

தோனி 2027ல் ஓய்வு? அஸ்வின் சொன்ன முக்கிய தகவல்!

எம்.எஸ். தோனி 2027 ஐபிஎல் சீசனில் களமிறங்கலாம் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இன்றைய போட்டியில் அவர் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது.

1 Min Read
விளையாட்டு

ஓவல் டெஸ்டில் இங்கிலாந்து ஆல் அவுட்: நியூசிலாந்துக்கு 100 ரன் முன்னிலை

ஓவல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 291 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மேத்யூ பிஷரின் அரைசதத்தால் 291 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து 100 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?