தமிழக முதல்வர் விஜய், சட்டசபையில் 110 விதியின் கீழ் உரையாற்றியபோது, ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ், இனி ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் வரும் பொங்கல் தினத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும், இதற்காக ஆண்டுதோறும் சுமார் ரூ.4000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் முதல்வர் விஜய் அறிவித்தார்.
பெண்களின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், 'சிங்கத்தின் சிறப்பு அதிரடி படை திட்டம்' போன்ற பல்வேறு திட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் குறிப்பிட்டார். தாய் மாமன் தங்க மோதிரம், வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம், அண்ணன் சீர் திட்டம் போன்ற பல திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தை முதன்மை நோக்கமாகக் கொண்டு, தொலைநோக்குத் திட்ட ஆவணத்தின்படி அரசு செயல்பட்டு வருவதாக முதல்வர் விஜய் தெரிவித்தார். இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, அடுத்த முதலாம், மூன்றாம், ஐந்தாம் ஆண்டு திட்டங்களுக்குள் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன என்றும் அவர் கூறினார்.
தற்போது வளைகுடா பகுதியில் நிலவும் போர் சூழல் மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் சிரமமான சூழலை எதிர்கொண்டு வருவதாகவும், பொதுமக்களின் வருவாய் அதிகம் செலவாகிறது என்றும் முதல்வர் குறிப்பிட்டார். இந்த கடினமான சூழலிலும், பொதுமக்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆகவே, முதல் கட்டமாக அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். எரிவாயு சிலிண்டர் வாங்குவதற்கான தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். சிலிண்டர் பதிவு செய்து பெற்றவுடன், எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பட்டியல் பெற்று, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் தொகை செலுத்தப்படும் என்றும் முதல்வர் விளக்கினார்.
இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1 கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்து 104 குடும்பங்கள் பயனடைவார்கள். குறிப்பாக, ஆண்டு வருமானம் 2.50 லட்சத்திற்குள் உள்ள குடும்பங்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள், சிறு குறு விவசாய குடும்பத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்கள் உள்ளிட்டோர் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இதற்காக ஆண்டுக்கு ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் சட்டசபையில் தெரிவித்தார். இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
