தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பின் போது, எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மக்களுக்காக கடினமாக உழைக்க வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, ராகுல் காந்தியைச் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
ராகுல் காந்தி, 'தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை புதிதாக கட்டமைக்கவும், கட்சியை பலப்படுத்தவும் இதுவே சரியான நேரம். கடுமையாக பாடுபட வேண்டும். புதிய எம்.எல்.ஏ.க்கள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அகில இந்திய காங்கிரஸ் தலைமை முழு ஒத்துழைப்பை வழங்கும்' என்று உறுதியளித்தார்.
மேலும், தமிழக முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற தவெக அழைப்பு விடுத்துள்ளது. இதன் மூலம் மக்களுக்குத் தேவையான நற்பணிகளை முன்னெடுப்போம். எத்தனை அமைச்சர்கள் இடம் பெறுவார்கள் என்பது குறித்து தற்போது ஆலோசனை நடத்தி வருகிறோம்' என தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் தெரிவித்தார்.