MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ்: தாமதித்தால் ரூ.10,000 அபராதம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ்: தாமதித்தால் ரூ.10,000 அபராதம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ்: தாமதித்தால் ரூ.10,000 அபராதம்!

தமிழ்நாடு

10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ்: தாமதித்தால் ரூ.10,000 அபராதம்!

Fernandez
Last updated: ஆகஸ்ட் 14, 2026 6:33 காலை
Fernandez
Share
தேசிய நெடுஞ்சாலைகளில் ஆம்புலன்ஸ் சேவை குறித்த அறிவிப்பு பலகை
தேசிய நெடுஞ்சாலைகளில் புதிய விதி அமல்: 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வரவில்லை என்றால் ரூ.10,000 அபராதம்.
SHARE

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் பெருமளவு மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில், விபத்தில் சிக்குவோரை தாமதமின்றி மருத்துவமனையில் சேர்ப்பதன் அவசியத்தை உச்ச நீதிமன்றமும், மத்திய கணக்கு தணிக்கையாளரும் சுட்டிக்காட்டினர். இதைத் தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விபத்து காலங்களில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்கும் வகையில் அதிரடியான புதிய திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

விபத்தில் சிக்குவோருக்கு உடனடியாக சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அவசரகால பராமரிப்பு திட்டத்தின் கீழ், அவசரகால கட்டுப்பாட்டு நெறிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய விதிகளின்படி, பொதுமக்கள் அழைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதில் இருந்து, 10 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் நடக்கும் விபத்து பகுதிக்கு ஆம்புலன்ஸ் வாகனம் 10 நிமிடங்களுக்குள் சென்றடைய வேண்டும். 10 கிலோமீட்டருக்கு அதிகமான தூரம் எனில், அதற்கேற்ப பயண நேரம் கணக்கிடப்படும்.

மேலும், அழைப்பு பெறப்பட்டதில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள், விபத்தில் சிக்கியவரை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துவிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவை மீறும் பட்சத்தில் அல்லது அவசர அழைப்பை நிராகரிக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் வாகன ஒப்பந்ததாரருக்கு, தவறு நிகழும் ஒவ்வொரு முறையும் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரித்துள்ளது.

தற்போது, தேசிய நெடுஞ்சாலைகளில் 3,000 ஆம்புலன்ஸ் வாகனங்களும், 1,000 ரோந்து வாகனங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்களின் இயக்கத்தை துல்லியமாக கண்காணிக்க ஜி.பி.எஸ். கருவிகளும், சிறப்பு சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன.

ஆம்புலன்ஸ்களில் உரிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் போதுமான ஊழியர்கள் இல்லாவிட்டாலும் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், 1033 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் விபத்து காலங்களில் உயிர்காக்கும் சிகிச்சையை விரைவாக உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AccidentAmbulanceFineMedical EmergencyNational Highwayஅபராதம்ஆம்புலன்ஸ்தேசிய நெடுஞ்சாலைமருத்துவ உதவிவிபத்து
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article ஸ்மார்ட்போனை டேப் செய்து பணம் செலுத்தும் காட்சி இனி UPI பரிவர்த்தனைகளுக்கு இன்டர்நெட் தேவையில்லை: புதிய அப்டேட்!
Next Article சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து மோசடி செய்த கும்பல் குறித்து விசாரணை நீதிபதியிடமே ரூ.2.50 கோடி மோசடி: சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து மிரட்டல் கும்பல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பாக்கெட் உணவு எச்சரிக்கை லேபிள் வழக்கு

பாக்கெட் உணவுகளில் எச்சரிக்கை: 2 வார கெடு விதித்த உச்ச நீதிமன்றம்

அதிக சர்க்கரை, உப்பு, கொழுப்பு உள்ள பாக்கெட் உணவுகளின் முன்புறத்தில் எச்சரிக்கை லேபிள்:…

ஆகஸ்ட் 14, 2026

ஹரித்வார் புனித பூமி குப்பை மேடானது: பக்தர்கள் வருகையால் அவதி

உத்தராகண்ட் மாநிலத்தின் புனித நகரமான ஹரித்வார், 5…

ஆகஸ்ட் 14, 2026

திருப்பதியில் ஒரே நாளில் 82,800 பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒரே நாளில்…

ஆகஸ்ட் 14, 2026

ஜார்க்கண்டில் அரசுப் பணியாளர் தேர்வில் முறைகேடு: 600 பேர் மீது வழக்கு

ஜார்க்கண்டில் அரசுப் பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாகக்…

ஆகஸ்ட் 14, 2026

கொல்கத்தா மருத்துவமனையில் செவிலியர் மர்ம மரணம்: உடல் கழிவறையில் மீட்பு

கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண்…

ஆகஸ்ட் 14, 2026

You Might Also Like

தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்வு குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்வு: விரைவில் அறிவிப்பு?

தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

2 Min Read
தாம்பரம் அருகே கொலை சம்பவம் நடைபெற்ற இடம்
தமிழ்நாடு

தாம்பரம் அருகே செல்போன் திருட்டு: வாலிபர் அடித்துக்கொலை – நண்பர்கள் சரண்

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே செல்போன் திருடியதாக நண்பர்களால் அடித்துக்கொல்லப்பட்ட வாலிபர். நண்பர்கள் 4 பேர் காவல் நிலையத்தில் சரண்.

1 Min Read
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் செய்தி வெளியீடு
தமிழ்நாடு

டெல்லியில் வன்முறை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்: தவெக

டெல்லியில் நீட் தேர்வு குளறுபடிகளைக் கண்டித்து நடைபெற்ற பேரணியின் போது ஏற்பட்ட மோதல்கள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.

2 Min Read
தமிழ்நாடு அரசு தகவல் நம்பகத்தன்மை பிரிவு எக்ஸ் தள பதிவு
தமிழ்நாடு

மீன்பிடி நிவாரணத் தொகை குறைப்பு: அரசு விளக்கம்

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை குறைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களுக்கு அரசு விளக்கம். நிவாரணத் தொகை ரூ.8,000 ஆக தொடர்கிறது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?