MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஊட்டியில் ரோஜா கண்காட்சி: மலர்களால் உருவான பறவைகள் அசத்தல்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > ஊட்டியில் ரோஜா கண்காட்சி: மலர்களால் உருவான பறவைகள் அசத்தல்!
தமிழ்நாடு

ஊட்டியில் ரோஜா கண்காட்சி: மலர்களால் உருவான பறவைகள் அசத்தல்!

Admin
Last updated: May 14, 2026 3:41 pm
Admin
Share
SHARE

கோடை காலத்தை வரவேற்கும் வகையில், சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க ஊட்டியில் இன்று முதல் ரோஜா கண்காட்சி கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை இணைந்து நடத்தும் இந்த ஆண்டுக்கான கோடைவிழாவின் முக்கிய அம்சமாக, விஜயநகரம் ரோஜா பூங்காவில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அவர்கள் இந்த ரோஜா கண்காட்சியைத் தொடங்கி வைத்ததோடு, அங்கு மலர்களால் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்த பல்வேறு பறவை உருவங்களையும் பார்வையிட்டார். ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை மையப்படுத்தி ரோஜா கண்காட்சியில் அலங்காரங்கள் செய்வது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு பறவையினங்களை மையப்படுத்தி, கண்கவர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கண்காட்சிக்காக, சுமார் 2 லட்சம் ரோஜா மலர்கள் பயன்படுத்தப்பட்டு, பல்வேறு வகையான பறவை இனங்களின் உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 80 ஆயிரம் ரோஜா மலர்களைக் கொண்டு பிரம்மாண்டமான அன்னப்பறவையும், 20 ஆயிரம் மலர்களால் ஹார்ன்பில் (இருவாச்சி) பறவையும், கழுகு, புல்புல், ஹங்கேரி பறவை உள்ளிட்ட 14-க்கும் மேற்பட்ட பறவை இனங்களின் வடிவங்களும் பூங்கா வளாகத்தில் பார்வையாளர்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மலர்களால் ஆன சிறிய அலங்காரங்கள், ரங்கோலி மற்றும் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்துக்கொள்ள செல்ஃபி ஸ்பாட்களும் அமைக்கப்பட்டுள்ளன.

பூங்கா முழுவதும் 4,310 வகைகளில் 33 ஆயிரம் ரோஜா செடிகள் பல்வேறு வண்ணங்களில் பூத்துக் குலுங்கி வருகின்றன. சிவப்பு, வெள்ளை, மஞ்சள், இளஞ்சிவப்பு, ஆரஞ்சு என கண்களைப் பறிக்கும் வண்ணங்களில் ரோஜாக்கள் பூங்காவுக்கு அழகு சேர்க்கின்றன. இன்று தொடங்கிய இந்த ரோஜா கண்காட்சி, வரும் மே 18 ஆம் தேதி (திங்கட்கிழமை) வரை 5 நாட்களுக்கு நடைபெறும். கண்காட்சி தொடங்கியதிலிருந்து, சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து ரோஜாக்களின் அழகையும், மலர்களால் ஆன பறவை உருவங்களையும் கண்டு ரசித்து, செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:OotyRose ShowTourismஊட்டிசுற்றுலாரோஜா கண்காட்சி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மு.க. ஸ்டாலின் மீது மரியாதை உண்டு: கார்த்தி சிதம்பரம் திடீர் கருத்து!
Next Article இந்த வீரர் இந்திய டெஸ்ட் அணிக்கு அவசியம் – அஸ்வின் பரிந்துரை!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

பொறுமையாக இருங்கள்; நல்ல செய்தி வரும்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

தமிழக அரசியல் களம் நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பான கட்டத்தை எட்டி வரும் நிலையில், சிவி சண்முகம் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தனியாக ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை…

1 Min Read
தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: அன்புமணி கண்டனம்!

பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.3 உயர்ந்துள்ள நிலையில், இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: அரசு ஆணை பிறப்பிப்பு

தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்ற நிலையில், நிதித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் நாளை மறுநாள் மின் தடை: பாதிக்கும் பகுதிகள் அறிவிப்பு

சென்னையில் 30.05.2026 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருமமுடிவாக்கம் பகுதியில் மின் விநியோகம் தடைபடும். பராமரிப்பு பணி காரணமாக இந்த…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?