MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: வெளிநாடு செல்வோர் நலத்திட்ட உதவிகள் பெற முடியாது – மேற்கு வங்க, பீகார் அதிரடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > வெளிநாடு செல்வோர் நலத்திட்ட உதவிகள் பெற முடியாது – மேற்கு வங்க, பீகார் அதிரடி
இந்தியா

வெளிநாடு செல்வோர் நலத்திட்ட உதவிகள் பெற முடியாது – மேற்கு வங்க, பீகார் அதிரடி

Admin
Last updated: May 14, 2026 12:13 pm
Admin
Share
SHARE

மேற்கு வங்காளத்திலும், பீகாரிலும் புதிதாக அமைந்துள்ள அரசுகள், நலத்திட்ட உதவிகள் தொடர்பாக அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. குறிப்பாக, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அரசு நலத்திட்ட உதவிகளை பெற முடியாது என இரு மாநில அரசுகளும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.

மேற்கு வங்காளத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான புதிய பாஜக அரசு பதவியேற்ற பிறகு நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், "அரசின் அனைத்து சமூக நலத்திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். ஆனால், இறந்தவர்கள், சட்டவிரோதமாக ஊடுருவியவர்கள் அல்லது இந்தியர் அல்லாத எவரும் மேற்கு வங்க மக்களின் நலத்திட்டங்களைப் பெற அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையின் கீழ் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அரசு நலத்திட்ட உதவிகளை பெற முடியாது என்றும், இது தொடர்பாக மேல்முறையீடு செய்தவர்களுக்கு இறுதி முடிவு எடுக்கப்படும் வரை நலத்திட்ட உதவி தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளவர்கள் அனைத்து அரசு திட்டங்களையும் பெறலாம் என்றும், ரேஷன் அட்டைகள் சரிபார்க்கப்படும் என்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் அசோக் கீர்த்ததனியா கூறியுள்ளார்.

இதேபோல், பீகார் தலைநகர் பாட்னாவில் முதல்வர் சாம்ராட் சவுத்ரி கூறுகையில், "பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், ரேஷன் பொருட்கள் மற்றும் பிற நலத்திட்டங்கள் உட்பட எந்தவொரு அரசு சலுகையையும் பெற முடியாது. இவர்களின் வங்கி பாஸ் புத்தகங்களும் உரிய காலத்தில் ரத்து செய்யப்படும்" என்று அறிவித்தார்.

பீகாரில் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்குப் பிறகு, சுமார் 5 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அம்மாநில உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் அசோக் சவுத்ரி தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகள் மூலம், தகுதியானவர்கள் மட்டுமே அரசு நலத்திட்டங்களைப் பெறுவதை உறுதி செய்வதோடு, முறைகேடுகளையும் தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Welfare Schemesஅரசு அறிவிப்புநலத்திட்டங்கள்பீகார்மேற்கு வங்கம்வாக்காளர் பட்டியல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நாகையில் கொடூரம்: ஆண், பெண் சடலங்கள் மீட்பு – போலீஸ் தீவிர விசாரணை!
Next Article ரூ.200 கோடி மோசடி: ஜாக்குலின் மனு வாபஸ் – முக்கிய திருப்பம்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரள முதல்​வர் யார்? வேணுகோ​பா​லுக்கு எதிர்ப்பு – போஸ்​டர்​கள் மூலம் எச்சரிக்கை!

கேரளாவில் காங்கிரஸ் முதல்வர் யார் என்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில், கே.சி. வேணுகோபாலை…

May 14, 2026

டெல்லியில் அதிர்ச்சி: பேருந்தில் பெண்ணுக்கு கொடூர பாலியல் வன்கொடுமை!

டெல்லியில் பேருந்தில் வைத்து மூன்று குழந்தைகளின் தாயான…

May 14, 2026

மருமகளின் ரீல்ஸ் வீடியோவால் மாமனார், மாமியார் தற்கொலை: அதிர்ச்சி சம்பவம்

அரியானாவில், மருமகளின் ரீல்ஸ் வீடியோக்களால் ஏற்பட்ட பிரச்சனை…

May 14, 2026

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தம்!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு…

May 14, 2026

கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி: வீ.டி. சதீசன் புதிய முதல்-மந்திரி!

கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி…

May 14, 2026

You Might Also Like

இந்தியா

சிறைச்சாலை அனுபவம்: ஒரு நாள் கைதியாக வாழ ரூ. 2000 போதும் – அசத்தல் திட்டம்!

ஹைதராபாத்தில் உள்ள சஞ்சல்குடா மத்திய சிறை, பொதுமக்கள் 12 அல்லது 24 மணி நேரம் சிறை வாழ்க்கையை அனுபவிக்கும் வகையில் 'சிறையை உணருங்கள்' என்ற புதிய திட்டத்தை…

1 Min Read
இந்தியா

டெல்லியில் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறும் திட்டம்

உலகளாவிய எரிபொருள் நெருக்கடி காரணமாக பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த சூழலில், இந்தியாவிலும் சமையல் எரிவாயு விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதைத்…

1 Min Read
இந்தியா

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: விடுதி உரிமையாளர் மூலம் அம்பலம்

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், ராஜஸ்தானில் உள்ள ஒரு விடுதி உரிமையாளரின் விழிப்புணர்வு முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த விவகாரம்…

1 Min Read
இந்தியா

டிசிஎஸ் நாசிக் பாலியல் துன்புறுத்தல்: இந்து மதம் இழிவுபடுத்தப்பட்டது, பெண்கள் குறிவைக்கப்பட்டனர் – மகளிர் ஆணையம் அதிர்ச்சித் தகவல்

டிசிஎஸ் நாசிக் கிளையில் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்கள், இந்து மத இழிவுபடுத்தல், மற்றும் பெண்கள் குறிவைக்கப்பட்டது குறித்து தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?