நடிகை சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'மா இன்டி பங்காரம்' திரைப்படம் வரும் ஜூன் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 'ஓ பேபி' படத்திற்குப் பிறகு இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடிக்கும் இந்தப் படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
1980-களில் நடக்கும் கதையை மையமாகக் கொண்ட ஒரு குடும்பப் பின்னணி அதிரடித் திரைப்படமாக 'மா இன்டி பங்காரம்' உருவாகியுள்ளது. இதில் சமந்தா, அமைதியான மருமகளாகவும், அதே சமயம் சவால்களை எதிர்கொள்ளும் ஒரு அதிரடிப் பெண்ணாகவும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
'மா இன்டி பங்காரம்' திரைப்படம் முதலில் மே 15 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, ஜூன் 19 அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
குல்ஷன் தேவையா, கௌதமி, ஸ்ரீமுகி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சமந்தாவின் வித்தியாசமான நடிப்பு மற்றும் கதைக்களம் ரசிகர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
