தமிழக முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்று நான்கு நாட்களே ஆன நிலையில், தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர்.
அந்த வகையில், அ.ம.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், தற்போது ஆளும் த.வெ.க. அரசுக்கு தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், 'நேற்றே தெரிவித்தேன். நேற்றும், இன்றும், நாளையும் என வரும் ஐந்தாண்டு காலமும் த.வெ.க. அரசுக்கு எனது முழு ஆதரவு உண்டு' என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், 'நமது முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டு மக்களை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறார். அவர் என்னையும் பாதுகாப்பார். ஆட்சி பொறுப்பேற்று நான்கு நாட்களிலேயே, திருச்சியில் 300க்கும் மேற்பட்ட ரவுடிகள் சரணடைந்துள்ளனர். கடத்தல்காரர்கள், கஞ்சா வியாபாரிகள் போன்றோர் எங்கு சென்றார்கள் என்றே தெரியவில்லை. இது முதலமைச்சர் விஜயின் சிறப்பான செயல்பாட்டிற்கு சான்று' எனத் தெரிவித்தார்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, குறுகிய காலத்திலேயே சட்டம் ஒழுங்கை கடுமையாக்கி, குற்றவாளிகளை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. அரசு வெற்றி பெற்று, தனது மக்கள் நலப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
