MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: 3 பேரைக் கொன்ற முன்னாள் ராணுவ வீரர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - இந்தியா - 3 பேரைக் கொன்ற முன்னாள் ராணுவ வீரர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

இந்தியா

3 பேரைக் கொன்ற முன்னாள் ராணுவ வீரர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

Admin
Last updated: மே 12, 2026 7:32 மணி
Admin
Share
SHARE

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸைச் சேர்ந்த 45 வயது குர்பிரீத் சிங், ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் 26 மணி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று பேரைக் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிக்க முயன்றார். ஆனால், போலீசார் அவரை கைது செய்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, குர்பிரீத் சிங் கொல்கத்தாவில் இருந்து ஜம்மு நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது பீகாரைச் சேர்ந்த தினேஷ் ஷா என்பவர் தனது குடும்பத்துடன் அதே ரயிலில் பயணித்துள்ளார். நள்ளிரவில், குர்பிரீத் சிங் தினேஷ் ஷாவை துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயமடைந்த தினேஷ் உயிரிழந்தார்.

ரயில் மெதுவாகச் சென்றுகொண்டிருந்தபோது, வாரணாசி ரயில் நிலையத்தில் குர்பிரீத் இறங்கி தப்பித்தார். அன்றைய தினம் காலையில், சகல்திஹா ரயில் நிலையம் அருகே ஒரு பயணிகள் ரயிலில் மனாக்ரு என்பவரை குர்பிரீத் சிங் சுட்டுக் கொன்றுவிட்டு, அவரது உடலை தண்டவாளத்தில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றார்.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை, சந்தவுலி நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்ற சிங், அங்கு ஒரு பெண் நோயாளியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள், அவர் தப்பிச் செல்ல விடாமல் பிடித்து கடுமையாகத் தாக்கினர்.

பின்னர் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரைக் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்தச் சம்பவம் குறித்து நடித்துக் காட்ட நேற்று இரவு போலீசார் அவரை அழைத்துச் சென்றனர்.

அப்போது, ஒரு போலீஸ்காரரின் துப்பாக்கியைப் பறித்த குர்பிரீத் சிங், போலீசாரை நோக்கிச் சுட்டார். இதற்குப் பதிலடியாக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார். இந்த என்கவுன்ட்டரில் மூன்று போலீசார் காயமடைந்தனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விராட் கோலியின் கண்கள் பொய் சொல்லாது; அவரிடமிருந்து உத்வேகம் பெறுகிறேன்: க்ருணல் பாண்டியா
Next Article ‘பாஜகவின் ஊழல் ஆட்சி மாணவர்களின் உழைப்பை நசுக்குகிறது’ – நீட் தேர்வு ரத்து குறித்து ராகுல் காந்தி கண்டனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

இந்தியா

டெல்லியில் இனி மின்சார ஆட்டோக்கள் மட்டுமே: காற்று மாசை கட்டுப்படுத்த அதிரடி!

டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த புதிய அதிரடி உத்தரவு! 2027 முதல் மின்சார ஆட்டோக்கள் மட்டுமே பதிவு செய்யப்படும். புகை சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல்…

1 Min Read
இந்தியா

ஜனநாயகத்தைக் காக்க ஒன்றிணைந்து போராடுவோம்: ராகுல் காந்தி

ஜனநாயகத்தின் ஆன்மாவைப் பாதுகாக்க ஒன்றிணைந்து போராடுவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய அவர், இந்திய அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சித்…

1 Min Read
இந்தியா

ஆந்திராவில் 4 விமான நிலையங்களில் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் விரைவில்

திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய வசதியாக, ஆந்திராவில் உள்ள 4 விமான நிலையங்களில் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட் விற்பனை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இது பக்தர்களிடையே பெரும்…

1 Min Read
இந்தியா

மனுதாரர்கள் அடையாள அட்டை கட்டாயம்: அன்னா ஹசாரே உண்ணாவிரதம் எச்சரிக்கை

மனுதாரர்கள் அடையாள அட்டை இணைப்பது கட்டாயம் என்ற அரசு விதியை திரும்பப் பெறாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?