ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல், திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில் பிறந்தவர். பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் கிரிக்கெட் வீரராக சிறந்து விளங்கினார். 1989ஆம் ஆண்டு காலகட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஜோதிடம் கணித்துக் கூறினார். அதன் பின்னர் ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றார். 1996ஆம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா தோல்வியடைவார் என்றும், சிறை செல்ல நேரிடும் என்றும் ரிக்கி ரத்தன் பண்டிட் கணித்துச் சொன்னார்.
ராதன் பண்டிட் கணித்த பெரும்பாலான நிகழ்வுகள் அப்படியே நடந்ததால், ஜெயலலிதா அவரை தனது தனிப்பட்ட ஜோதிடராகக் கொண்டு ஆலோசனைகளைப் பெறுவதை வழக்கமாக்கிக் கொண்டார். அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட போதும், தேர்தல் சமயங்களிலும், பல முக்கிய முடிவுகளிலும் ஜெயலலிதா தன்னிடம் ஆலோசனை பெற்றே செயல்பட்டதாக ராதன் பண்டிட் தெரிவித்துள்ளார். தனக்கு எதிரான பல வழக்குகளிலும் ஜெயலலிதா தனது ஆலோசனையின்படியே நடந்ததாக ராதன் பண்டிட் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கிய பிறகு, பண்டிட் வெற்றிவேல் அவருக்கு மிகவும் நெருக்கமானார். 2026ஆம் ஆண்டு விஜய் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராவார் என சில யூடியூப் சேனல்களில் பண்டிட் வெற்றிவேல் பேட்டியளித்திருந்தார். மேலும், விஜய்யின் பிரசார நிகழ்ச்சிகளுக்கான தேதிகளை இவரே குறித்துக் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில், ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார்.
தற்போது, முதல்-அமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக (அரசியல்) ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலை நியமனம் செய்து, தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர் ஒரு ஜோதிடராகவும், தவெகவின் செய்தித் தொடர்பாளராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.