MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை வழக்கு: பிஹார், உ.பி.யைச் சேர்ந்த மூன்று கூலிப்படையினர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை வழக்கு: பிஹார், உ.பி.யைச் சேர்ந்த மூன்று கூலிப்படையினர் கைது
இந்தியா

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை வழக்கு: பிஹார், உ.பி.யைச் சேர்ந்த மூன்று கூலிப்படையினர் கைது

Admin
Last updated: May 12, 2026 11:52 am
Admin
Share
SHARE

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளரான சந்திரநாத் ரத் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பிஹார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த மூன்று கூலிப்படையினரை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கைது செய்துள்ளனர்.

பிஹார் மாநிலம் பக்சர் பகுதியில் மயங்க் ராஜ் மிஸ்ரா, விக்கி மௌரியா ஆகிய இருவரும், உத்தரப் பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தில் ராஜ் சிங் என்பவரும் கைது செய்யப்பட்டனர். கைதான ராஜ் சிங் மீது ஏற்கெனவே 15-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னாள் விமானப் படை வீரரும், மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளருமான சந்திரநாத் ரத், கடந்த மே 6-ஆம் தேதி இரவு தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மத்தியம்கிராம் பகுதியில் மர்ம நபர்களால் வழிமறித்துச் சுடப்பட்டார். சுமார் ஏழு கிலோமீட்டர் தூரம் துரத்தி வரப்பட்ட அவரது காரை வழிமறித்த அந்தக் கும்பல், அவர் மீது ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டது.

இந்தத் துப்பாக்கிச்சூட்டில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சந்திரநாத் ரத்தின் காரை ஓட்டி வந்த புத்ததேவ் பேரா, மூன்று குண்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து பாஜக வெற்றி பெற்ற இரண்டே நாட்களில் இந்தக் கொலை சம்பவம் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தனது உதவியாளர் என்பதால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அவர் கொல்லப்பட்டதாக சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டினார். பாஜக தலைவர்கள் இந்த கொலைக்கு திரிணமூல் காங்கிரஸே காரணம் என்று கூறி வரும் நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூன்று பேரும் திங்கள்கிழமை பாராசாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 13 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இவர்கள் மூவரும் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இவர்களை ஏவிவிட்ட முக்கியக் குற்றவாளிகள் யார், கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்துத் தனிப்படை போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஜாக்குலின் அப்ரூவராக மாற அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு
Next Article நடிகை ரவீணா ரவிக்கு மலையாள இயக்குநருடன் திருமணம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உ.பி-யில் கனமழை: 111 பேர் பலி – மீட்புப் பணிகள் தீவிரம்!

உத்தரப்பிரதேசத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து 111 பேர் உயிரிழந்த நிலையில், மீட்புப்…

May 15, 2026

கேரள முதல்வர் பதவியேற்பு: ஸ்டாலினுக்கு அழைப்பு!

கேரளாவில் விரைவில் நடைபெறவுள்ள முதலமைச்சர் பதவியேற்பு விழாவில்…

May 15, 2026

மேற்கு வங்க சட்டசபை தேர்தல்: திரிபுராவை முறியடித்த வரலாறு படைத்த வாக்குப்பதிவு!

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் 93.71% வாக்குகள்…

May 15, 2026

ஹைதராபாத் – ஜெய்ப்பூர் ரயிலில் தீ விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!

ஹைதராபாத் - ஜெய்ப்பூர் விரைவு ரயிலின் ஏசி…

May 15, 2026

நீட் தேர்வு முறைகேடு: ஒரே குடும்பத்தினர் 5 பேர் கைது – அதிர்ச்சி பின்னணி!

ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில்,…

May 15, 2026

You Might Also Like

இந்தியா

சுடுகாட்டில் பிணங்களின் ஆடைகளை திருடி விற்பனை

உத்தரபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சுடுகாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் இறந்த உடல்களில் இருந்து ஆடைகளைத் திருடி, அவற்றை ஒரு கும்பலுக்கு விற்பனை செய்கின்றனர். அந்தக் கும்பல், இறந்த…

1 Min Read
இந்தியா

பிரதமர் மோடி தலைமையில் சோம்நாத் கோயிலுக்கு இன்று கும்பாபிஷேகம்

கிர் சோம்நாத்: குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோம்நாத் கோயிலுக்கு பிரதமர் மோடி தலைமையில் முதல் முறையாக இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. குஜராத்தின் கிர் சோம்நாத்…

1 Min Read
இந்தியா

கேரளாவில் பினராயி விஜயனை சந்தித்த புதிய முதலமைச்சர் சதீசன்!

கேரளாவின் புதிய முதலமைச்சர் வி.டி.சதீசன், முன்னாள் முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

1 Min Read
இந்தியா

உச்ச நீதிமன்றத்தில் வீடியோ கான்ஃபரன்ஸ் விசாரணை: செலவு குறைப்பு நடவடிக்கை!

மேற்காசிய போர் பதற்றம் காரணமாக செலவுகளைக் குறைக்க, உச்ச நீதிமன்றத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வழக்குகள் காணொளி காட்சி மூலம் மட்டுமே விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?