MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதலமைச்சரை விமர்சித்த எம்.எல்.ஏ கைது: உதயநிதி கண்டனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதலமைச்சரை விமர்சித்த எம்.எல்.ஏ கைது: உதயநிதி கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதலமைச்சரை விமர்சித்த எம்.எல்.ஏ கைது: உதயநிதி கண்டனம்

தமிழ்நாடு

முதலமைச்சரை விமர்சித்த எம்.எல்.ஏ கைது: உதயநிதி கண்டனம்

Fernandez
Last updated: ஜூலை 20, 2026 10:19 மணி
Fernandez
Share
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்
SHARE

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன், முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி, அவரை அவரது இல்லத்தில் வைத்து போலீஸார் இன்று காலை கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், தனது எக்ஸ் (X) தளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சரை விமர்சித்துப் பேசியதாக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதை 'சோஃபா மாடல்' அரசு என விமர்சித்த உதயநிதி, இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு, ஒரே நாளில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளது ஜனநாயகப் படுகொலை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக, மக்கள் பிரதிநிதி என்றுகூடப் பார்க்காமல், அதிகாலை 6 மணிக்கே காவல்துறையை அனுப்பி கைது செய்து, விசாரணை என்ற பெயரில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அடைத்து வைப்பது உச்சபட்ச அடக்குமுறை என்று உதயநிதி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இது அரசின் அராஜகப் போக்கைக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதே தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணாலேயே குற்றம் சாட்டப்பட்ட த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், எந்தவிதமான கைது நடவடிக்கையும் இன்றி லாரி டயர்களை ஆய்வு செய்து கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தச் சூழலில், கழக சட்டமன்ற உறுப்பினரை மட்டும் குறிவைத்து காவல்துறை கைது செய்வது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்தும்போது, ஆளுங்கட்சிக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் எதிர்பார்ப்பது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது. ஆளும் அரசின் சரி, தவறுகளைச் சுட்டிக்காட்டி விமர்சிப்பது எதிர்க்கட்சியின் மாபெரும் ஜனநாயகக் கடமை என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இந்த அரசின் அராஜகப் போக்கையும், பேசினாலே கைது செய்யும் நடவடிக்கையையும் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆணவத்தில் இதுபோல் எத்தனை கைதுகளைச் செய்தாலும், கழக உடன்பிறப்புகள் ஒருபோதும் அஞ்சமாட்டோம் என்றும், மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் இந்த ஆட்சியாளர்கள் பின்னடைவைச் சந்திப்பது உறுதி என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணனிடம் த.வெ.க.வினர் புகார் அளித்தனர். இதனையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது கொலை மிரட்டல், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுதல், இரண்டு அமைப்பு அல்லது கட்சிகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:உதயநிதி ஸ்டாலின்எம்.எல்.ஏ கைதுத.வெ.க.தமிழ்நாடுதிமுகதூத்துக்குடிமார்க்கண்டேயன்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article டாஸ்மாக் கடை அல்லது மதுபான பாட்டில்கள் டாஸ்மாக்: அனைத்து சப்ளையர்களுக்கும் சம ஒதுக்கீடு உத்தரவு
Next Article ஏதர் நிறுவனத்தின் புதிய மின்சார ஸ்கூட்டர் ஏதர் நிறுவனத்தின் மலிவான மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் ரஷ்ய தூதர்

ரஷ்ய கப்பல் மீது தாக்குதல்: 4 இந்திய மாலுமிகள் பலி – இந்தியா கண்டனம்

ரஷ்ய வணிகக் கப்பல் மீது நடந்த தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர்.…

ஜூலை 21, 2026

நாடாளுமன்ற தாக்குதல் அச்சம் – கங்கனா ரணாவத் பேட்டி

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய…

ஜூலை 21, 2026

நீட் விவகாரம்: ராகுல் காந்தி வார்த்தை தவறிவிட்டார் – மத்திய அமைச்சர்

டெல்லியில் பிரதமர் மோடி இல்லம் அருகே நீட்…

ஜூலை 21, 2026

பிரியங்கா காந்தி கைது: டெல்லி காவல்துறைக்கு காங்கிரஸ் கேள்வி

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி…

ஜூலை 21, 2026

ஜெனரல் டயரையும் மிஞ்சிய மோடி: கேஜ்ரிவால் கடும் தாக்கு

டெல்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள், பெண்கள் மீது…

ஜூலை 21, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சென்னையில் நாளை மின்தடை: மின்வாரிய பராமரிப்பு பணி

சென்னையில் நாளை (26.05.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மின்வாரிய பராமரிப்புப் பணிகளுக்காக இந்த…

2 Min Read
தமிழ்நாடு

நார்வே செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நார்வே செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்திற்கு பெருமை சேர்க்க இறைவனை பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.

0 Min Read
தமிழ்நாடு

ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: பெரும் தீ விபத்து!

ரஷ்யாவின் இரண்டு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. நாட்டின் எரிசக்தி கட்டமைப்பில் இது பெரும்…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

டாஸ்மாக் கடைகள்: முதல்வர் விஜய்க்கு நடிகர் பார்த்திபன் அசத்தல் யோசனை!

டாஸ்மாக் கடைகள் செயல்படும் விதம் குறித்து முதல்வர் விஜய்க்கு நடிகர் பார்த்திபன் ஒரு புதுமையான யோசனையை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'நான் முதல்வரிடம் ஒரு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?