பெங்களூரு: ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி வீரர் விராட் கோலி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 1000 ரன்கள் எடுக்க இன்னும் 28 ரன்களே தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மே 10 ராய்ப்பூரில் நடைபெறும் போட்டியில் இச்சாதனையை எட்டினால், அவர் மும்பைக்கு எதிராக 1000 ஐபிஎல் ரன்கள் எடுத்த முதல் வீரராவார். பிளேஆஃப் கனவுகளுக்கு இப்போட்டி முக்கியப் போட்டியாக அமைந்துள்ளது,
முன்னதாக, மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக கடந்த போட்டியில், கோலி ஐபிஎல், டி20 சாம்பியன்ஸ் லீக் சேர்த்து டி20-யில் 1000 ரன்களைக் கடந்தார். அந்த ஆட்டத்தில் 38 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து, மும்பைக்கு எதிராக மொத்தம் 1,030 டி20 ரன்களை அவர் குவித்தார்.
ஐபிஎல்-இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 34 போட்டிகளில் 972 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 32.4, ஸ்ட்ரைக் ரேட் 129. MI-க்கு எதிராக அதிக ரன் எடுத்தவர்கள்: கே.எல். ராகுல் (977), விராட் கோலி (972), ஷிகர் தவான் (901), சுரேஷ் ரெய்னா (824), மனிஷ் பாண்டே (796).
இந்த ஐபிஎல் சீசனில் கோலி சிறந்த பார்மில் உள்ளார். இதுவரை 10 போட்டிகளில் 47.38 சராசரியுடனும், 164 அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 379 ரன்கள் எடுத்துள்ளார். ஆரஞ்சு தொப்பிக்கான போட்டியில் அவர் ஒன்பதாவது இடத்தில் உள்ளார், 81 அதிகபட்ச ரன்களுடன் மூன்று அரை சதங்களையும் அடித்துள்ளார்.
இச்சீசனில், ஐபிஎல் வரலாற்றில் 9000 கேரியர் ரன்களையும், 800 பவுண்டரிகளையும் கடந்த முதல் வீரர் என்ற சாதனைகளை கோலி படைத்தார். அவரது நிலையான ஆட்டமே RCBயின் பிளேஆஃப் வாய்ப்புக்கு முக்கியம்.மறுபுறம், ஆர்சிபி தனது இரண்டு தோல்விப் பிடியை முறியடித்து, மீண்டும் வெற்றிப் பாதை அடைய மும்பைக்கு எதிரான இந்தப் போட்டியில் தனது பேட்டிங்கை பலப்படுத்த விரும்புகிறது. இது அவர்களின் ஐபிஎல் பயணத்தை மீட்க உதவும்.