MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: “நீண்டகால கூட்டணி கட்சியான திமுகவுக்கே துரோகம் இழைத்த கட்சி காங்கிரஸ்” – பிரதமர் மோடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - இந்தியா - “நீண்டகால கூட்டணி கட்சியான திமுகவுக்கே துரோகம் இழைத்த கட்சி காங்கிரஸ்” – பிரதமர் மோடி

இந்தியா

“நீண்டகால கூட்டணி கட்சியான திமுகவுக்கே துரோகம் இழைத்த கட்சி காங்கிரஸ்” – பிரதமர் மோடி

Admin
Last updated: மே 10, 2026 12:59 மணி
Admin
Share
SHARE

பெங்களூரு: துரோகம் இழைக்க மட்டுமே காங்கிரஸ் கட்சிக்குத் தெரியும் என்றும், தனது நீண்டகால கூட்டணி கட்சியான திமுகவுக்கே துரோம் இழைத்த கட்சி அது என்றும் பிரதமர் நரேந்திர மோடி சாடியுள்ளார்.

வாழும் கலை அமைப்பின் 45வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக கர்நாடகா வந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு கூடி இருந்த பாஜக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், “போலி வாக்குறுதிகள் காரணமாக காங்கிரஸ் கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. தற்போது அது, பிராந்திய கட்சிகளின் துணையுடன் பிழைத்து வாழும் ஒரு ஒட்டுண்ணி அரசியல் சக்தியாக உள்ளது.

எந்த ஒரு மாநிலத்திலும் காங்கிரஸ் அரசு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததில்லை. ஆட்சி அமைத்த சில மாதங்களிலேயே காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் அதிருப்தி எழத் தொடங்கிவிடுகிறது. இதற்குக் காரணம், துரோகம் இழைக்க மட்டுமே காங்கிரஸ் கட்சிக்குத் தெரியும். அவர்கள் பொய்யர்கள்; அவர்களின் வாக்குறுதிகளும் போலியானவை. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப் புத்தகத்தில் நிர்வாகம் என்ற அத்தியாயம் அறவே இல்லை.

தமிழ்நாட்டில் கடந்த 25-30 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் இடையே மிக நெருக்கமான உறவு இருந்து வருகிறது. திமுகவுடனான இந்த கூட்டணிதான் நெருக்கடியான தருணங்கள் பலவற்றில் இருந்த காங்கிரஸ் கட்சியை மீண்டும் மீண்டும் மீட்டெடுத்திருக்கிறது. 2014-ம் ஆண்டுக்கு முன் அவர்கள் 10 ஆண்டுகள் நடத்திய ஆட்சி, திமுகவின் துணையால் மட்டுமே நிலைத்திருந்தது.

25-30 ஆண்டுகளாக தங்களோடு மிக நெருக்கமான பிணைப்பைக் கொண்டிருந்த திமுகவை; காங்கிரஸ் கட்சியின் நலனுக்காக ஒவ்வொரு கணமும் உழைத்த அந்த திமுகவை; அதிகார ஆட்டம் வேறு திசைக்கு திரும்பிய உடனேயே அதிகார வெறிபிடித்த காங்கிரஸ் கட்சி தனது பதவி ஆசை காரணமாக கிடைத்த முதல் வாய்ப்பிலேயே திமுகவின் முதுகில் குத்திவிட்டது. நீண்டகாலக் கூட்டணி கட்சியான திமுகவுக்கு துரோகம் இழைத்துள்ளது. அரசியல் சூழல்கள் மாறும்போதெல்லாம் அக்கட்சி தனது சொந்த கூட்டணி கட்சிகளுக்கே எதிராக திரும்பிவிடுகிறது. ஒட்டுண்ணி போன்ற காங்கிரஸ் கட்சிக்கு இப்போது தனது இருப்பை தக்கவைத்துக்கொள்ள, தான் சவாரி செய்ய மற்றொரு கட்சியின் துணை தேவைப்படுகிறது.

ஒரு காலத்தில் 400க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி இப்போது, கூட்டணிகளை அமைத்த பிறகும் கூட 100 தொகுதிகள் என்ற இலக்கை கடக்க முடியாமல் திணறுகிறது. அதேநேரத்தில் பாஜக தனது செல்வாக்கை நாடு முழுவதும் விரிவுபடுத்தி வருகிறது. சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்னால், மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு 3 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருந்தார்கள். இன்று 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.

கேரளாவிலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற நிலையில் இருந்து தற்போது மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற நிலையை எட்டி இருக்கிறோம். கேரளாவில் பெரும்பான்மையைக் கடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. பாஜக தனது இருப்பை படிப்படியாக வலுப்படுத்தி வருகிறது” என தெரிவித்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 200 யூனிட் இலவச மின்சாரம்: முதல்வர் விஜய்யின் முதல் கையெழுத்து
Next Article மகரம்: இன்றைய ராசிபலன் – 10 மே 2026
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து மாயமான மீனவர்களை தேடும் பணி

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்கும்…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்!

திருப்பதி திருமலையில் 116 வயது மூதாட்டி 3,550…

ஜூலை 5, 2026

You Might Also Like

இந்தியா

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க நிலம் ஒதுக்க மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி ஒப்புதல்

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், வங்கதேச எல்லையில் வேலி அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்யவும், மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியைத்…

1 Min Read
இந்தியா

திருப்பதிக்கு மின்சார பேருந்து: சென்னையில் பக்தரின் அன்பளிப்பு!

சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவர், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு மின்சார பேருந்தை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இது பக்தர்களுக்கு இலவச சேவையாக பயன்படுத்தப்படும்.

1 Min Read
இந்தியா

காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தில் 5 பேர் பரிதாபம்

காவிரி ஆற்றங்கரையில் செல்பி எடுக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Min Read
இந்தியா

மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி முதல் முறையாக பாஜக வெற்றி பெற்றது. சுவேந்து அதிகாரி முதல்வர் பொறுப்பேற்றார். பதவியேற்றது…

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?