MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: காதலனுக்காக 129 பவுன் நகைகள் திருட்டு: சிறுமி, 5 பேர் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: காதலனுக்காக 129 பவுன் நகைகள் திருட்டு: சிறுமி, 5 பேர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - காதலனுக்காக 129 பவுன் நகைகள் திருட்டு: சிறுமி, 5 பேர் கைது

தமிழ்நாடு

காதலனுக்காக 129 பவுன் நகைகள் திருட்டு: சிறுமி, 5 பேர் கைது

Fernandez
Last updated: ஜூலை 8, 2026 2:30 மணி
Fernandez
Share
காதலனுக்காக 129 பவுன் நகைகளை திருடிய சிறுமி மற்றும் கைது செய்யப்பட்ட நபர்கள்
காதலனுக்காக 129 பவுன் நகைகளை திருடிய சிறுமி மற்றும் கைது செய்யப்பட்ட நபர்கள்.
SHARE

சென்னையில், காதலனின் ஆசை வார்த்தைகளை நம்பி, வீட்டில் இருந்த சுமார் 129 பவுன் தங்க நகைகளை திருடி கொடுத்த 18 வயது சிறுமி மற்றும் அவரது காதலன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (51), தனது அண்ணன் இறந்துவிட்டதால், அவரது அண்ணி மற்றும் மூன்று மகள்களை கவனித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, தனது சொந்தமான 22 பவுன் தங்க நகைகளை அண்ணியிடம் கொடுத்து பத்திரமாக வைக்குமாறு கூறியுள்ளார். சமீபத்தில், வீட்டில் இருந்த நகைகளை சரிபார்த்தபோது, பன்னீர்செல்வம் கொடுத்த 22 பவுன் நகைகள் மற்றும் குடும்பத்திற்கு சொந்தமான 107 பவுன் நகைகள் என மொத்தம் 129 பவுன் தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீட்டின் கதவோ, பீரோவோ உடைக்கப்படாததால், வீட்டில் உள்ள நபர்கள் யாரேனும் நகைகளை எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. விசாரணையில், பன்னீர்செல்வத்தின் அண்ணனின் மூன்றாவது மகளான 18 வயது சிறுமியின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

தொடர் விசாரணையில், கடந்த ஆண்டு பிளஸ்-2 விடுமுறையின்போது, சிறுமி தற்காலிகமாக வேலை செய்த இடத்தில், செனாய் நகரைச் சேர்ந்த கார்த்திக் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கார்த்திக், தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றும், மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்படுகிறது என்றும் கூறி, சிறுமியிடம் நயமாக பேசி பணம் கேட்டுள்ளார்.

காதலனின் வார்த்தைகளை நம்பிய சிறுமி, யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்த நகைகளை சிறுக சிறுக திருடி கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார். கார்த்திக் தொடர்ந்து பணம், நகை என கேட்க, வீட்டில் இருந்த 129 பவுன் தங்க நகைகளையும் சிறுமி அவனிடம் கொடுத்துள்ளார். ஏமாந்த சிறுமியிடம் இருந்து பெற்ற நகைகளை கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அடகு வைத்தும், விற்றும் பணமாக்கியுள்ளனர்.

அந்த பணத்தில், அவர்கள் புதிதாக கார், இருசக்கர வாகனம், விலை உயர்ந்த செல்போன்கள் வாங்கி ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த மோசடி சம்பவத்தில் தொடர்புடைய கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களான ஆவடியைச் சேர்ந்த குமரகோபால் (20), பிரகாஷ் (22), ரமேஷ் (47), சூர்யா (28) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 6 பவுன் தங்க நகைகள், ஒரு செல்போன், ரூ.50 ஆயிரம் ரொக்கம், ஒரு கார் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். காதலனுக்காக வீட்டில் இருந்த 129 பவுன் நகைகளை திருடி கொடுத்த சிறுமியின் இந்த விபரீத செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:129 பவுன் நகைகள்Chennai PoliceGold TheftTamil Nadu Crimeகாதலனுக்காக திருட்டுசென்னை செய்திகள்தங்க நகைகள் திருட்டுமதுரவாயல் போலீஸ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் திருப்பதி உண்டியலில் ரூ.4.72 கோடி குவிந்தது: பக்தர்கள் நீண்ட வரிசை
Next Article முதல்வர் விஜய் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்பு முதல்வர் விஜய் அதிரடி: நலத்திட்ட உதவிகள் அனைவருக்கும் சென்றடைய உத்தரவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அமர்நாத் குகைக்கோவிலில் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்கின்றனர்

அமர்நாத் யாத்திரை: 5 நாட்களில் 1.13 லட்சம் பக்தர்கள் பனிலிங்க தரிசனம்

அமர்நாத் யாத்திரை: இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக்கோவிலில் 57 நாட்கள் நடைபெறும் யாத்திரையின்…

ஜூலை 8, 2026

திருப்பதி உண்டியலில் ரூ.4.72 கோடி குவிந்தது: பக்தர்கள் நீண்ட வரிசை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக…

ஜூலை 8, 2026

மத்தியபிரதேசத்தில் கிணற்றில் 13 மான்கள் உயிரிழப்பு: விசாரணை தீவிரம்

மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு கிணற்றுக்குள் 13 மான்கள்…

ஜூலை 8, 2026

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த துணை போலீஸ்…

ஜூலை 8, 2026

இந்தியாவில் 1.6 லட்சம் கணக்குகளை முடக்கிய மெட்டா நிறுவனம்

இந்தியாவில் சட்டவிரோத மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும்…

ஜூலை 8, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கடற்கரையில் அமைச்சர் சரத்குமார் மது அருந்தும் புதிய வீடியோ வைரல்!

மனிதவளத்துறை அமைச்சர் கில்லி சரத்குமார் கடற்கரையில் மது அருந்தும் புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அவரது முந்தைய சர்ச்சை ஓய்வதற்குள் வெளியாகியுள்ளது.

1 Min Read
அமைச்சர் வன்னியரசு திமுகவை எச்சரிக்கும் காட்சி
தமிழ்நாடு

திமுகவை எச்சரித்த வன்னியரசு: ‘திருப்பி அடித்தால் தாங்க மாட்டீர்கள்!’

கூட்டணி விவகாரத்தில் திமுகவை எச்சரித்த அமைச்சர் வன்னியரசு, 'திருப்பி அடித்தால் தாங்க மாட்டீர்கள்' என கடுமையாக சாடினார். விசிகவின் நிலைப்பாடு குறித்து அவர் விளக்கமளித்தார்.

1 Min Read
தமிழ்நாடு

அம்மா உணவகத்தில் ஆய்வு: அமைச்சர் வன்னி அரசுக்கு ஊழியர்கள் புகார்

சென்னையில் அம்மா உணவகத்தில் உணவு அருந்திய அமைச்சர் வன்னி அரசு, ஊழியர்களின் குறைகளை கேட்டறிந்தார். காய்கறிகள் முறையாக வழங்கப்படுவதில்லை என ஊழியர்கள் புகார் தெரிவித்தனர்.

1 Min Read
தமிழ்நாடு

அமைச்சரவை நாளை முதல் அதிரடி: தலைமைச் செயலகத்தில் ஆலோசனை!

புதிய அமைச்சரவை நாளை முதல் தலைமைச் செயலகத்தில் பணிகளைத் தொடங்குகிறது. திட்டங்கள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?