MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வெளியேறுபவர்கள் வெளியேறட்டும்: அதிமுக மீண்டும் எழும் – எடப்பாடி பழனிசாமி உறுதி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வெளியேறுபவர்கள் வெளியேறட்டும்: அதிமுக மீண்டும் எழும் – எடப்பாடி பழனிசாமி உறுதி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - வெளியேறுபவர்கள் வெளியேறட்டும்: அதிமுக மீண்டும் எழும் – எடப்பாடி பழனிசாமி உறுதி

தமிழ்நாடு

வெளியேறுபவர்கள் வெளியேறட்டும்: அதிமுக மீண்டும் எழும் – எடப்பாடி பழனிசாமி உறுதி

Admin
Last updated: ஜூலை 5, 2026 7:01 காலை
Admin
Share
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பு
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
SHARE

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டத்தின் தற்போதைய கட்சி அமைப்பு, உறுப்பினர் சேர்க்கை, களப்பணிகள் மற்றும் எதிர்கால தேர்தல் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சந்தித்த தோல்விக்கான காரணங்கள், மாவட்ட வாரியாக ஏற்பட்ட பின்னடைவுகள், வாக்கு சதவீதம் குறைந்த பகுதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலை முன்னிட்டு, கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் எவ்வாறு சிறப்பாக செயல்படுவது, கட்சியின் களப்பணிகளை எப்படி மேலும் வலுப்படுத்துவது, கட்சியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்தும் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, தாராபுரம் சத்தியபாமா, மதுராந்தகம் மரகதம் குமாரவேல், விராலிமலை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணைத்துக்கொண்டனர். மேலும், முன்னாள் அமைச்சர்களான எம்.எஸ்.எம்.ஆனந்தன், வளர்மதி ஆகியோரும் அதிமுகவிலிருந்து விலகி த.வெ.க-வில் இணைந்துள்ளனர். தொடர்ந்து இன்னும் பல முக்கிய நிர்வாகிகள் அதிமுகவிலிருந்து விலகி த.வெ.க-வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்தச் சூழலில், அந்தந்த மாவட்டங்களில் அதிமுக கட்சியின் செயல்பாடுகளை வலுப்படுத்தி புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 'தமிழக வெற்றிக் கழகம் சுனாமி பேரலை விபத்து போல வெற்றி பெற்றுள்ளது. ஆனால் வருகிற உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல்களில் நிச்சயமாக அதிமுகவே வெற்றி பெறும். அதற்காக அனைவரும் உழைக்க வேண்டும்' என நிர்வாகிகளிடம் வலியுறுத்தினார்.

மேலும், 'அதிமுகவில் இருந்து பலனடைந்து தற்போது கட்சி சரிந்திருக்கும் நேரத்தில் அதனை தாங்கி பிடிக்காமல் வெளியேறுபவர்கள் வெளியேறட்டும். நிச்சயமாக நம்முடைய கட்சி மீண்டும் எழும்' என நிர்வாகிகளிடம் அவர் உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.

திருவண்ணாமலையைத் தொடர்ந்து, இன்று மாலை பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டத்தை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலோசனைக் கூட்டங்கள் அதிமுகவின் எதிர்கால வியூகங்களை வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKEdappadi PalaniswamiTVKஅதிமுகஉள்ளாட்சித் தேர்தல்எடப்பாடி பழனிசாமிசட்டமன்றத் தேர்தல்தமிழக வெற்றிக் கழகம்தவெக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அமைச்சர் டி.கே. பிரபுவின் தந்தை அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்கிறார் அமைச்சர் அப்பாவின் ஆய்வு: பாஜக எஸ்.ஜி.சூர்யா விமர்சனம்
Next Article மாதவிடாய் பிரச்சனைகளுக்கு இயற்கை தீர்வுகள்: இஞ்சி, தேன், பப்பாளி, கொத்தமல்லி, எள் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு இயற்கை தீர்வுகள்: இஞ்சி, தேன் கலவை சிறப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் கட்சித் தலைவர் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்

மத்திய அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்யுமா? காங்கிரஸ் கேள்வி

பாராளுமன்றக் கூட்டத் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு 10 நாட்கள் ஆகியும் அதிகாரப்பூர்வமாக முடித்து…

ஆகஸ்ட் 23, 2026

வாடிக்கையாளரை உருவ கேலி செய்த காபி நிறுவனம்: மன்னிப்பு கோரிய SUBKO

பெங்களூரு SUBKO காபி நிறுவனம், வாடிக்கையாளரை ரசீதில்…

ஆகஸ்ட் 23, 2026

சீனா செல்கிறார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்: எல்லைப் பிரச்சினை விவாதம்

எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில், தேசிய…

ஆகஸ்ட் 23, 2026

ராகுலின் மாணவர் குரல் நிகழ்ச்சி: பாஜக நிலைகுலைந்ததாக காங்கிரஸ் விமர்சனம்

புனேவில் ராகுல் காந்தி நடத்திய மாணவர் கலந்துரையாடலை…

ஆகஸ்ட் 23, 2026

பா.ஜ.க.வில் ஜென்சி தலைமுறையினருக்காக சிறப்பு அணி: முக்கிய நிர்வாகிகள் நியமனம்

இளம் தலைமுறையினரை ஈர்க்கும் நோக்கில் பா.ஜ.க.வில் 'ஜென்சி'…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

தமிழ்நாடு

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை?

சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் தெற்கு மத்தியப் பிரதேசத்தின் மையப்பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை விதர்பா, மரத்வாடா, உள் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு வழியாக ஒரு…

1 Min Read
தமிழ்நாடு

17 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே…

1 Min Read
தமிழ்நாடு

நீட் தேர்வு அச்சம்: மாணவர் தற்கொலை – தமிழகத்தில் சோகம்

நீட் தேர்வு அச்சத்தால் தருமபுரி மாணவர் வெற்றியானந்தம் தற்கொலை. கடந்த வாரத்தில் இது நான்காவது சம்பவம். தமிழகம் முழுவதும் 307 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

1 Min Read
அமைச்சர் வெங்கட்ரமணன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

ரேஷன் அரிசி இனி சமையலுக்கும் பயன்படும் – அமைச்சர் வெங்கட்ரமணன்

ரேஷன் கடைகளில் இனி சமையலுக்கும் பயன்படுத்தக்கூடிய தரமான அரிசி வழங்கப்படும் என அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?