MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம்: செந்தில்பாலாஜி சகோதரர் உட்பட 4 பேர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம்: செந்தில்பாலாஜி சகோதரர் உட்பட 4 பேர் கைது
தமிழ்நாடு

தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம்: செந்தில்பாலாஜி சகோதரர் உட்பட 4 பேர் கைது

Admin
Last updated: July 3, 2026 11:34 am
Admin
Share
SHARE

தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கும் நோக்கில், எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய விவகாரத்தில், திமுக முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜியின் சகோதரர் வி.அசோக்குமார் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. டாக்டர் என்.இளையராஜாவிடம், சென்னையைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தான் ஒரு கருத்துக் கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், முக்கிய அரசியல் கட்சியினர் சார்பில் பேசுவதாகவும் கூறி நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். பின்னர், சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இருப்பதாகவும், அதில் தங்களுக்கு சாதகமாக வாக்களிக்க வேண்டும் என்றும், அதற்கு ஈடாக ரூ.35 கோடி வரை பணம் தருவதாகவும் ஆசை வார்த்தை காட்டியுள்ளார். எம்.எல்.ஏ. இளையராஜா மறுப்பு தெரிவித்தபோது, இதுகுறித்து வெளியே கூறினால் உயிருக்கு ஆபத்து என மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து எம்.எல்.ஏ. இளையராஜா கடந்த மாதம் 29-ம் தேதி சென்னை காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். செல்போன் அழைப்பு விவரங்கள், தொழில்நுட்ப ஆதாரங்களை சேகரித்து, சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், இந்த சதியில் திமுக முன்னாள் அமைச்சரும், கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜியின் சகோதரர் வி.அசோக்குமாருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட 4 பேரும் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, 3 பேரை ஜூலை 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான நரேசை, செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் நேரடியாக சந்தித்து பேசியதாகவும், அவர்கள் அறிவுறுத்தலின் பேரிலேயே எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேசியதாகவும் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாகியுள்ள அசோக்கை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:TN Politicsஅசோக்குமார்ஆட்சியை கவிழ்க்ககைதுசெந்தில்பாலாஜிதவெகபேரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஹோண்டாவின் புதிய 7 சீட்டர் கார்: டாடா, மஹிந்த்ராவுக்கு சவால்!
Next Article சூப்பர் எல் நினோ: தமிழகத்திற்கு பேராபத்து? வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு உத்தரவு: 7 மொபைல் செயலிகளுக்கு தடை

7 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை: முக்கிய அறிவிப்பு

இந்தியாவில் செயல்பட்டு வந்த 7 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை…

July 3, 2026

தமிழகத்தில் நேர்மையான ஆட்சி: முதல்-அமைச்சர் விஜயை புகழும் வைகோ

முதல்-அமைச்சர் விஜய் ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை வழங்கி…

July 3, 2026

மேகதாது விவகாரம்: டி.கே. சிவக்குமார் அமைதிக்கு அசோகா கேள்வி

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் தலைவர்…

July 3, 2026

சகோதரரை தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சனுக்கு நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரி நீதிமன்றம், அமைச்சர் மரிய வில்சன் தனது…

July 3, 2026

வாட்ஸ்அப் புதிய யூசர்நேம் அம்சம்: பாதுகாப்பு அம்சங்கள் என்ன?

வாட்ஸ்அப் தனது புதிய 'யூசர்நேம்' அம்சம் குறித்து…

July 3, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் நீக்கம்: சசிகலா வேதனை

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலில் உள்ள அம்மா உணவகத்தில் ஜெயலலிதாவின் புகைப்படம் அகற்றப்பட்டதற்கு வி.கே.சசிகலா வேதனை தெரிவித்துள்ளார். புகைப்படத்தை மீண்டும் இடம்பெறச் செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

1 Min Read
சினிமா

நடிகை ருக்மினி வசந்த்: ஆபாச வீடியோ வெளியிட்ட 3 பேர் கைது!

நடிகை ருக்மினி வசந்த் குறித்த ஆபாசமான டீப்ஃபேக் வீடியோவை வெளியிட்டதாக 3 பேர் கர்நாடக சைபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின்…

1 Min Read
தமிழ்நாடு

வேலுமணி தரப்பு வாக்குகள் செல்லுமா? சபாநாயகர் முடிவு செய்வார் – திருமாவளவன் பேட்டி

வேளச்சேரியில் உள்ள திருமாவளவன் வீட்டிற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய், பெரும்பான்மை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து பெற்றார்; அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம் மற்றும் எஸ்.பி. வேலுமணி…

1 Min Read
தமிழ்நாடு

திருச்செந்தூர் கோவிலைச் சுற்றி 500 கடைகள் அகற்றம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை சுற்றியிருந்த 500-க்கும் மேற்பட்ட கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டன. பக்தர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?