கட்சிக்காக உழைத்தவர்களுக்கு உரிய பதவி வழங்கப்படாததால், சிலர் அதிருப்தியில் த.வெ.க.வில் இணைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறுகையில், 'கட்சியின் ஆரம்ப காலம் முதல் உழைத்தவர்களுக்கு பதவி வழங்கப்படவில்லை. பலர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். எதிர்பார்த்த பதவி கிடைக்காததாலும், பதவியில் இருந்து நீக்கப்பட்டதாலும் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் த.வெ.க.வில் இணைந்துள்ளனர். அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என இபிஎஸ்-க்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளோம். எடப்பாடி பழனிசாமி நடத்திய மகளிரணி கூட்டத்துக்கு என்னை அழைக்கவில்லை. நான் அதிமுகவில் இருந்து விலகவில்லை, கட்சியின் அடிப்படை உறுப்பினராகவே தொடர்கிறேன்' என்று கூறினார்.
You Might Also Like
பட்டாசு தொழில்முனைவோரை நசுக்காதீர்கள்: தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
சிவகாசியில் உரிமம் பெற்ற பட்டாசு தொழில்முனைவோரை 'ஆய்வு' என்ற பெயரில் அரசு நசுக்குவதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார். அரசின் கெடுபிடிகளால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம்…
2 Min Read
தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்
நாளை தமிழகம் முழுவதும் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. முதல்வர் விஜய் பாலவாக்கத்தில் இதை தொடங்கி வைக்கிறார். அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து…
1 Min Read
சர்வதேச இளைஞர் நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!
சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, முதல்வர் விஜய் இளைய சமுதாயத்தினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சோதனைகளை வென்று சாதனைகள் படைக்க அவர் இளைஞர்களை ஊக்குவித்துள்ளார்.
1 Min Read
தங்கம் விலை அதிரடி சரிவு: சவரனுக்கு ரூ.2160 குறைவு!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2160 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.13,030க்கும், ஒரு கிராம் வெள்ளி ரூ.240க்கும் விற்பனையாகிறது. இது நுகர்வோருக்கு ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.
1 Min Read
