கட்சிக்காக உழைத்தவர்களுக்கு உரிய பதவி வழங்கப்படாததால், சிலர் அதிருப்தியில் த.வெ.க.வில் இணைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறுகையில், 'கட்சியின் ஆரம்ப காலம் முதல் உழைத்தவர்களுக்கு பதவி வழங்கப்படவில்லை. பலர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். எதிர்பார்த்த பதவி கிடைக்காததாலும், பதவியில் இருந்து நீக்கப்பட்டதாலும் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் த.வெ.க.வில் இணைந்துள்ளனர். அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என இபிஎஸ்-க்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளோம். எடப்பாடி பழனிசாமி நடத்திய மகளிரணி கூட்டத்துக்கு என்னை அழைக்கவில்லை. நான் அதிமுகவில் இருந்து விலகவில்லை, கட்சியின் அடிப்படை உறுப்பினராகவே தொடர்கிறேன்' என்று கூறினார்.
You Might Also Like
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
1 Min Read
பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு: தமிழிசை கண்டனம்
தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜோசப் விஜய்யின் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மான விவாதம் இன்று தொடங்கியது. இந்த விவாதத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் சட்டமன்ற தலைவர்…
1 Min Read
சனாதனம் ஒழிக: உதயநிதி ஸ்டாலின் விளக்கம் – யாருக்கும் எதிரானவர்கள் அல்ல!
சனாதனம் குறித்த தனது பேச்சுக்கு எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள உதயநிதி ஸ்டாலின், சமூகத்தில் சமத்துவமின்மையையும், ஒடுக்குமுறையையும் எதிர்ப்பதாகக் கூறினார்.
1 Min Read
3வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து – திமுக கண்டனம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் வரிசைப்படுத்தப்பட்ட விதம் தொடர்பாகச் சர்ச்சை எழுந்துள்ளது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்…
1 Min Read